Virudunagar

News April 28, 2025

ஓட்டுநரை தாக்கி ஆட்டோவை சேதப்படுத்திய சிறுவர்கள் கைது

image

ஸ்ரீவி.நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (38). லோடு ஆட்டோ ஓட்டுநர். திருப்பதியுடன் வேலை பார்க்கும் விஜயன் என்பவருக்கும், சிறுவர்கள் சிலருடன் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோவில் சென்ற திருப்பதி,விஜயனுடன் தகராறில் ஈடுபட்ட சிறுவர்கள் செங்கலால் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சென்றனர். சம்பவத்தில் தொடர்புடைய  ஸ்ரீவி.நகர் போலீசார் 17வயது இரு சிறுவர்களை கைது செய்து விசாரணை

News April 27, 2025

விருதுநகர் மாவட்ட முக்கிய அரசு அலுவலக எண்கள்

image

விருதுநகர் மாவட்ட அளவிலான அலுவலக எண்கள்
▶️மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) 04562-252660
▶️தணித்துணை ஆட்சியர் 04562-252742
▶️மாவட்ட சமூக நல அலுவலா் 04562-252397
▶️மாவட்ட மேலாளா் (தாட்கோ) 04562-252324
▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் 04562-293613
▶️மாவட்ட பதிவாளா் (பதிவுத்துறை) 04562-243529
▶️மக்கள் தொடா்பு அலுவலா் 04562-252028
இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

சிவகாசி : கிடா விருந்து நிகழ்வு ரத்து

image

விருதுநகர் மாவட்டம் அதிமுக சிவகாசி சட்டமன்ற தொகுதி சார்பாக கிரிக்கெட் வீரர்களுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவும் , கிடா விருந்து அளிக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தால் நிகழ்ந்த உயிரிழப்பின் காரணமாக மே 4-க்கு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.

News April 27, 2025

பாலியல் துன்புறுத்தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று பாலின சமத்துவம், பெண்களின் அதிகாரம் அளித்தல் மற்றும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்பராயன், புகழேந்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

News April 26, 2025

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக போட்டிகள் அறிவிப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே.9 அன்று அனைத்து பள்ளி 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மே.10 அன்று கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் பெற்று tamilvalar.vnr@tn.gov.in இல் மே.5 க்குள் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக ரூ.10000 வழங்கப்படும்.

News April 26, 2025

பட்டாசு ஆலை விபத்துக்கு முற்றுப்புள்ள எப்போது? – டிடிவி

image

சிவகாசி பட்டாசு விபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

News April 26, 2025

விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்கள் தொழிலாளர் தினமான மே.1 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கடைகள் செயல்பட்டால் மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News April 26, 2025

சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் 2 பேர் பலி

image

சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் செயல்படும் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் சற்றுமுன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் சேதமன நிலையில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் இதில் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

News April 26, 2025

சிவகாசி: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி

image

சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2021 முதல் 2025 வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் கவிதா பாண்டியராஜன். இந்த ஊராட்சியில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவை நிதியை வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக கூறி யூனியன் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 26, 2025

விருதுநகரில் 1,802 பேர் நாய் கடியால் பாதிப்பு

image

விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் 1,802 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதில் நாரணாபுரம் பகுதியில் மட்டும் 46 பேரை நாய்கள் கடித்துள்ளது. தற்போது அனைவரும் நலமுடன் உள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் ஏப்.5,6 அன்று மட்டுமே 87 பேரை நாய்கள் கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!