Virudunagar

News April 4, 2024

கோவில் திருவிழா: தொழிலாளர்களுக்கு விடுமுறை

image

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் (ம) சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விரு கோவில்களிலும் வரும் 8, 9ம் நாள் விழாவாக கயிறு குத்துதல், அக்கினி சட்டி எடுத்தல் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்றும் முக்கிய விழாவாக நடைபெறும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் 8ம்தேதி விடுமுறை விடப்படடுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

விருதுநகர்: சிறப்பு செலவு கணக்கு பார்வையாளர் எண் அறிவிப்பு

image

தமிழக அளவிலான சிறப்பு செலவு கணக்கு பார்வையாளர் தொடர்பு எண் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக அளவிலான சிறப்பு செலவு கணக்கு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை 9345298218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான முனைவர் ஜெயசீலன் இன்று செய்தி வெளியீட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

விருதுநகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற இலச்சினை வரைபட வடிவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

News April 3, 2024

விருதுநகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற இலச்சினை வரைபட வடிவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

News April 3, 2024

அருப்புக்கோட்டை அருகே ஒருவர் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி ஸ்ரீரங்காய் (62). இந்நிலையில் வீட்டில் இருந்த ஸ்ரீரங்காய் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரிக்கின்றனர்.

News April 3, 2024

விருதுநகரில் லோடுமேன் மரணம் 

image

விருதுநகர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் லோடுமேன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வி.வி.ஆர் சிலை அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News April 3, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஒருவர் குத்தி கொலை

image

ஶ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(42). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரிமுத்து தனது வீட்டிலிருந்து கை காட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்தபோது, மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.அவர் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 2, 2024

வத்திராயிருப்பு அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

image

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் நேற்று (01-04-24) தனது இருசக்கர வாகனத்தில் வத்திராயிருப்பு தாலுகா, வலையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி மீது மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 2, 2024

ஸ்ரீவில்லி: தமாக தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து, ஸ்ரீவில்லி பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!