Virudunagar

News April 7, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 9, 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் வட்டார அளவில் கபடி போட்டி நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உள்ள வீரர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

99 வயதுடைய முதியோரை கௌரவித்த ஆட்சியர்

image

விருதுநகர், சாத்தூர் பெரியார் நகரில் வசிக்கும் 99 வயதுடைய மூத்த வாக்காளர் ராமசாமிதேவர் என்பவர் மக்களவை தேர்தல்-2024 முன்னிட்டு, தபால் வாக்குச்சீட்டு மூலம் வீட்டில் இருந்தபடியே தவறாமல் ஜனநாயக கடமையாற்றியதை பாராட்டி, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இன்று (06.4.2024) அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

News April 6, 2024

சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு

image

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் அம்மாவாசை முன்னிட்டு இன்று ஏப்ரல் 6 முதல் 9ஆம் தேதி வரை வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதையடுத்து இன்று பிரதோஷத்தை முன்னிட்டு காலை முதலே திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மலைக் கோயிலில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News April 6, 2024

விருதுநகர்:பதற்றமான வாக்குச்சாவடி வெளியீடு

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 314 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி கூட மிகவும் பதற்றமானது இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

விருதுநகரில் துணை ராணுவப்படை அணிவகுப்பு

image

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1680 வாக்குச்சாவடிகளில் 186 வாக்குச்சாவடிகள் பிரச்சனைகளுக்கு உரியவை, 2 வாக்குச்சாவடிகள் பதற்றம் ஆனவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

News April 5, 2024

சதுரகிரிக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை ஏப்.6 ஆம் தேதி முதல் ஏப்.9 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

விருதுநகர்: வாகன சோதனையில் புகையிலை பறிமுதல்

image

வத்திராயிருப்பு, தாணிப்பாறை விலக்கு அருகே போலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த வத்திராயிருப்பை சேர்ந்த பொன்ராஜ்(42) என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் பொன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News April 5, 2024

விருதுநகர்: குளிக்கச் சென்ற இடத்தில் மரணம் 

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (20). தேநீர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை கோனேரி குளத்தில் குளிக்கும்போது, வழுக்கி விழுந்ததில் அடிபட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2024

ஆட்சியர் தலைமையில் “காபி வித் கலெக்டர்”

image

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள நான்கு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் “காப்பு வித் கலெக்டர்” என்ற 65-ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கினார்.

error: Content is protected !!