Virudunagar

News March 13, 2025

சுரைக்காய் கூட்டில் லட்சங்களில் வருமானம் ஈட்டும் விவசாயி

image

விருதுநகர், சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பூமிநாதன். இவர் தன்னுடைய தோட்டத்தில் விளையும் சுரைக்காய்களை நன்கு முற்றவிட்டு பறவைகளுக்கான கூடுகள் தயார் செய்து விற்று வருகிறார். பறவைகளுக்கு வாழ்விடம் அளிக்கும் கூடுகளாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதில் கூடுதல் லாபம் கிடைப்பதாக சொல்கிறார் விவசாயி பூமிநாதன். இதன் மூலம் மாதம் ரூ.1.50 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.*விவசாயிகளுக்கு பகிரவும்

News March 13, 2025

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (மார்ச்.19) அன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்

News March 13, 2025

விருதுநகரில் முன்னாள் ராணுவ வீரர் கொலை

image

காரியாபட்டி அருகே மு.ராணுவ வீரர் துரைப்பாண்டி(62) (மார்ச்.1) காணாமல் போன புகாரின் விசாரணையில், துரைப்பாண்டி கார் வாங்கியதில் கூடுதல் கமிஷன் பெற்ற பாண்டி(28), ராம்குமார்(27) இருவரையும் போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். அதன்பின், தார் குடோனுக்கு துரைப்பாண்டியை வரவழைத்து, இருவரும் சேர்ந்து தாக்கி, அவரது உடலை தார் தொட்டிக்குள் போட்டு தீயிட்டுள்ளனர். இருவர் கைத செய்தனர்

News March 13, 2025

விருதுநகரில் ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

image

விருதுநகரில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்த 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியானவர்களுக்கு அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் ww.tahdco.com இல் விண்ணப்பிக்கலாம்.

News March 12, 2025

விருதுநகர் மாணவர்களே.. கேட்டரிங் பயில ஆர்வமா?

image

தாட்கோ மூலம் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ சேர்ந்து படிக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பயிற்சியில் சேர தாட்கோ இணையதளமான www.thadco.com இந்த முகவரியில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி விருதுநகர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்

News March 12, 2025

விருதுநகரில் மருத்துவக் குணம் கொண்ட அதலைக்காய்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மானாவாரி பகுதிகளில் மழைக்காலத்தில் அதலைக்காய் செழிப்பாக வளர்ந்திருப்பதைக் காணலாம். இதில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதாக பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். சமீப காலமாக இதன் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பிற மாவட்ட மக்களும் இதனை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஷேர்

News March 12, 2025

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க விண்ணப்பிக்கலாம்

image

தாட்கோ மூலமாக 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழகுடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை மாத ஊதியமாக பெறலாம்.ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 11, 2025

சதுரகிரி கோவிலுக்கு குறைவாக சென்ற பக்தர்கள்

image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக மார்ச் 11 முதல் 14 வரை பக்தர்கள் மலையைறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை முதலே சாரல் மழை பெய்தாலே சதுரகிரி கோயில்களுக்கு குறைவான பக்தர்களை சென்றனர்.

News March 11, 2025

சிவகாசியில் ஒரே மாதத்தில் 4 கொலைகள்

image

சிவகாசியில் கடந்த ஒரே மாதத்தில் குடும்பத்தகராறில் 4 கொலைகள் நடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிப்.13 முருகன் காலனியில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன், பிப்.25 மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன், மார்ச்.5 மனைவியை எரித்து கொன்ற கணவன், மார்ச்.9 திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கருப்பசாமி வெட்டி கொலை. கொலை எதற்கும் தீர்வாகாது. வாழ்க்கை குறித்து 1 நிமிடம் யோசித்து முடிவெடுங்கள்.

error: Content is protected !!