India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மார்ச் 21ம் தேதி அன்று ஒரு வேட்பு மனுவும், மார்ச் 25ம் தேதி அன்று 15 வேட்பு மனுவும், மார்ச் 26ம் தேதி என்று 7 வேட்பு மனுவும், மார்ச் 27ம் தேதி அன்று 18 வேட்பு மனு என மொத்தம் 41 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவை இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன. மேலும் மார்ச் 30 ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் நேற்று மாலை என் புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு அரிவாளை காட்டி சாலையில் செல்வோரை மிரட்டியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று (27.3.24) 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு இந்த செல்பி பாயிண்ட் திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு பிரசுரங்களையும் தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
விருதுநகர் தொகுதிக்கு தற்போது வரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காங்கிரஸ் தேமுதிக பாஜக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுயேச்சை மாற்று வேட்பாளர் உள்ளிட்ட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுவதால் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. பொது தேர்வுகள் துவங்கி உள்ள நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அருப்புக்கோட்டை கட்ட கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் காவியா(24). இந்நிலையில் நேற்று (25.3.24) காவியா வீட்டில் இருந்த நாய் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவரின் நாயை பார்த்து குலைத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த வல்லரசு கம்பியால் காவியா வீட்டில் இருந்த நாயை அடித்து கொன்று விட்டதாகவும், மேலும் காவியா & அவரது அத்தைக்கு வல்லரசு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
Sorry, no posts matched your criteria.