India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அருப்புக்கோட்டை அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (24). இந்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி தனது நண்பர் ராம்குமார் என்பவர் உடன் பைக்கில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராமலிங்காமில் அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள கேவிஎஸ் மேனேஜிங் போர்ட் பொருட்காட்சி மைதானத்தில் கே வி எஸ் 76 ஆவது பொருட்காட்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பொருட்காட்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாதவன், பள்ளி செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 27-ம் தேதி வரையிலும், மொத்தம் 41 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த எம்.ஆர்.ராதாவின் பேரனும், திரைப்பட நடிகருமான எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்தார். இவரது சொந்த அத்தையுமான விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 3ம் தேதிக்கு பின் இவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தாலுகா போலீசார் நேற்று மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(75). இந்நிலையில் நேற்று மூதாட்டி தனலட்சுமி கடைக்குச் செல்வதற்காக முத்துராமலிங்கபுரம் பஸ் ஸ்டாப் அருகே அருப்புக்கோட்டை – சாயல்குடி சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதி தனலட்சுமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் இசக்கி (கர்ப்பிணி). இவரது ஸ்கேன் அறிக்கையை பார்க்காமல் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடல் தொந்தரவுகள் காரணமாக மீண்டும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தை இறந்து 3 நாட்கள் ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று(மார்ச்.28) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் முறைகேட்டை ஆதாரப்பூர்வமாக ஆளுநரிடம் அளித்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் நடுநிலையோடு நடக்க வேண்டும்” என கூறினார்.
பாஜக வேட்பாளர் ராதிகாவின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.53,45,34,012 ஆக உள்ளது. இவருடைய மாற்று வேட்பாளர் சரத்குமாருக்கு அசையும் அசையா சொத்துக்கள் என 29,82,57,684 ஆக உள்ளது. காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.2,39,75,095 ஆகும். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.17,95,59,371 ஆக உள்ளது.
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில அளவிலான தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி வினா போட்டி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் வரும் 30- ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.பதிவு செய்ய இன்றே (28-03-2024) கடைசி நாள்.போட்டியில் முதல் பரிசுக்கு 25,000, இரண்டாம் பரிசுக்கு 15,000, மூன்றாம் பரிசுக்கு 10,000 ருபாய் வழங்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.