India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பந்தல்குடியை சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியசாமி. இந்நிலையில் பீட்டர் ஆரோக்கியசாமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றபோது, திடீரென அவரது வீட்டில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத் துறை விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டிலிருந்த மின் சாதன பொருட்கள் ஆவணங்கள் எரிந்து நாசம் ஆகியது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.
சிவகாசியில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வரிசைகள் காத்திருந்த இளைஞர் ஒருவர் ஐபிஎல் குறித்த பதாகையை கையில் ஏந்தியபடி வந்திருந்தார். அதில் தான் ஒரு சிஎஸ்கே ரசிகன் எனவும் ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை விராட் கோலி சார்ந்துள்ள பெங்களுர் அணி வெல்லும் என கன்னட வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதிய பதாகையுடன் வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்த முனியாண்டி என்பவர் இறந்தார். நேற்று அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்றனர்.அதே ஊரை சேர்ந்த கலைமணியை (27) வீரஅபிமன்ன(51),வீர பூபதி(24),மற்றொருவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். உறவினர்கள் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்சைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.சாத்தூர் போலீஸ் விசாரணை.
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று விருதுநகர் அதிமுக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எனது தந்தை விஜயகாந்த் மறைந்து நேற்றுடன் 100வது நாள் நிறைவடைந்த நிலையிலும், அவரது சமாதிக்கு அஞ்சலி கூட செலுத்தாமல் உங்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக உருக்கமாக தெரிவித்தார். என் தந்தையை போல் மக்கள் சேவை ஆற்றுவேன் எனவும் உறுதியளித்தார்.
விருதுநகர், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (07.04.2024) வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், வாக்குசாவடி அலுவலர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து விளங்கினார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் இன்று வாக்கு சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் தலைமை வகித்தார். இதில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஜெயசீலன் விளக்கினர்.
விருதுநகர், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரும் இவருடைய மனைவியும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு கிருஷ்ணன் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மாலை திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 9, 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் வட்டார அளவில் கபடி போட்டி நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உள்ள வீரர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், சாத்தூர் பெரியார் நகரில் வசிக்கும் 99 வயதுடைய மூத்த வாக்காளர் ராமசாமிதேவர் என்பவர் மக்களவை தேர்தல்-2024 முன்னிட்டு, தபால் வாக்குச்சீட்டு மூலம் வீட்டில் இருந்தபடியே தவறாமல் ஜனநாயக கடமையாற்றியதை பாராட்டி, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இன்று (06.4.2024) அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
Sorry, no posts matched your criteria.