India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் தான் பிரபலமானது என நினைக்கிறார்களா..? ஆர்.ஆர்.நகர் அடுத்த கன்னிசேரி புதூரில் செய்யப்படும் கருப்பட்டி மிட்டாய் பெயர் பெற்றது. குறிப்பாக செந்நெல்குடி, பட்டம் புதூர், கன்னிசேரி புதூர் ஆகிய ஊர்களில் திருவிழா சமயங்களில் சீரனி மிட்டாய் கடைகள் அதிகமாக காணப்படும்.
விருதுநகர் ஆணைக் குழாய் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(24). இவரிடம் பொதுப்பணி துறையில் ஜூனியர் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த ரவீந்திரன், கோவையைச் சேர்ந்த உஷாராணி, காஞ்சிபுரத்தை சேர்ந்த கௌரிசங்கர் ஆகியோர் 6.85 லட்சத்தை பெற்று போலி நியமன ஆணையை வழங்கி உள்ளனர். இதுகுறித்து ஊரக போலீசார் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. விருதுநகர் மாவட்டதில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி வரும் 13ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஜிஎஸ்டி என்னும் நெருப்பின் மூலம் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை சிதறடித்த பாஜகவை எங்கள் ஆதரவு உங்களுக்கு இல்லை” இப்படிக்கு ஜிஎஸ்டி நலிவடைந்த பொதுமக்கள் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
செவல்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம் , அன்னபூரணியாபுரம், கொட்டமடக்கிபட்டி , அலமேல்மங்கபுரம், துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் 1 மணியளவில் பலத்த மழை பெய்தது. வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று தென்றல் வருடும் போல வீசுவதால் சுற்று வட்டார பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
விருதுநகர் உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பெரியபள்ளி வாசலில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை நிகழ்வில் நேற்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி வாசலில் இருந்த இஸ்லாமிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை கூறியதுடன் பள்ளி வாசல் பகுதியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
விருதுநகர் அருகே சத்திர ரெட்டியாபட்டி சோதனை சாவடியில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நிலையான கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பறக்கும் படையினர் சோதனையிடும் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியரின் ஆய்வால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர்.
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கு பதிவு செய்து வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.