Virudunagar

News March 15, 2025

அமைச்சர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

கடந்த 2006 – 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது வழக்கு தொடர்ந்து ஸ்ரீவி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் சீராய்வு மனு தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் எடுத்தது. நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஏப்.25 க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 15, 2025

இன்றைய வேளாண்மை பட்ஜெட்டில் விருதுநகர் எதிர்பார்ப்பு

image

▶️திருச்சுழி, காரியாபட்டியில் மல்லிகை பூ வாசனை திரவிய தொழிற்சாலை.
▶️மாவட்டத்தில் வேளான் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
▶️சிறுதானிய குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும்.
▶️கரிசல் மண்களுக்கு ஏற்ற புதிய விதைகள், புதிய வேளான் பயிர்களை வழங்க வேண்டும்.
▶️வனவிலங்கு,மனித மோதலை தடுக்க வேண்டும்.
▶️காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
▶️ மிளகாய் வத்தல் தொழிற்சாலை.

News March 15, 2025

மருத்துவத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்தத்தில் மருத்துவ அலுவலர் 2, செவிலியர் 2 சுகாதார ஆய்வாளர் 2, மருத்துவப் பணியாளர் 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 24 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 15, 2025

இந்த விவசாயிகளுக்கு மட்டும் உதவித் தொகை

image

விருதுநகர் மாவட்டத்தில் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதித் தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்யலாம். மீதமுள்ள 29,423 விவசாயிகள் மார்ச்.31க்குள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

நரிக்குடி அருகே கரி வியாபாரி மீது தாக்குதல் – 3 பேர் கைது

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நெடுகனேந்தல் பகுதியை சேர்ந்த கரி வியாபாரியான செந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவால், கத்தி போன்ற ஆயுதங்களால் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து செந்திலை கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று ஜெயலட்சுமி,சந்திரசேகரன், ஜெயசீலன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 14, 2025

விருதுநகரில் 2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு

image

ஜனவரி 2025 முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையுடன் கூட்டாய்வுகள், சைல்ட் லைன் புகார்களின் அடிப்படையில் உணவு கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளில் ஆய்வு செய்ததில் 2 குழந்தை தொழிலாளர்கள் 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 14, 2025

BREAKING விருதுநகரில் மினி டைட்டல் பார்க்

image

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைட்டல் பார்க் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முலம் 6620 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

News March 14, 2025

நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரத்தன்று தான் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளுவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு மாசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். இதனையடுத்து சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 14, 2025

விருதுநகரில் தமிழக பட்ஜெட் நேரலை

image

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும். விருதுநகர் மக்கள் பட்ஜெட்டை அறிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 9.30 மணி முதல் LED திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

News March 14, 2025

வேலை தேடும் இளைஞர்களின் கவனத்திற்கு

image

தமிழக அரசு உருவாக்கிய தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில் 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!