India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரடியாக தெரிவித்து பயனடையலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
▶️திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில்
▶️காமராஜர் நினைவு இல்லம்
▶️சஞ்சீவி மலை
▶️குக்கன்பாறை
▶️செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்
▶️அய்யனார் அருவி
▶️சதுரகிரி மலை
▶️பள்ளிமடம்
▶️பிளவாக்கல் அணை
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
விருதுநகரில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <
அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் காவலாளி சித்தையன். இவர் டூவிலரில் வாழ்வாங்கிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் போது தூத்துக்குடியில் இருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஏப்.01 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி வகுப்புகள் ஏப்.23 முதல் ஆரம்பிக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே <
விருதுநகரில் செயல்படும் பிரபல ஜவுளி நிறுவனத்தில் டெய்லர், தரக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். வின்னப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.