Virudunagar

News June 13, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் நேற்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு மனித சங்கிலியினை , மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

News June 12, 2024

மாணவ மாணவிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும்/ இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. எனவே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும், காவலர்களிடமிருந்து 74 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

News June 12, 2024

விருதுநகரில் 21 குழந்தை திருமணங்கள்

image

விருதுநகரில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 1 முதல் 31 வரை 21 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது வழக்குகள் பதிவு செய்தனர்.18 வயது பூர்த்தி அடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

News June 12, 2024

விருதுநகர் மக்களின் கனிவான கவனத்திற்கு!

image

விருதுநகர் பகுதியில் நாளை உயர் அழுத்த மின் பாதையில் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தெப்பம்,பஜார் வாடி, என் தெரு, கசாப்புக்காரர் தெரு, உள் தெரு,ஐசிஐ காலனி ராமமூர்த்தி ரோடு, கம்மாபட்டி காலேஜ் ரோடு ,பட்டேல் ரோடு, குட்செட் ரோடு எம்எஸ்பி நகர் ஆகிய பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

கலக்கத்தில் காவல்துறையினர்!

image

விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல்துறையில் 1999 ஆண்டு இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஜூன் 1 முதல் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி இதுவரை பதவி உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்துவதாக போலீசார் புலம்புகின்றனர்.

News June 12, 2024

விருதுநகரில் 31 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமனம்

image

விருதுநகரில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 87 உதவி மருத்துவர்கள் இருக்க வேண்டும்.ஆனால் 55 உதவி மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.இதனால் மீதமுள்ள 32 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில் கால்நடை உதவி மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் 31 பேர் மாவட்டத்தின் மருந்தகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கான தேவையான மருத்துவம் தடையின்றி கிடைக்கும்.

News June 12, 2024

விருதுநகர்: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

image

ஜூன் 12ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று விருதுநகர் இரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் காலை 11.50க்கு ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள் செல்வி தலைமையிலும் இரயில்வே நிலைய மேலாளர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

error: Content is protected !!