Virudunagar

News June 15, 2024

விருதுநகரில் கிராஃபிக் டிசைனர் மாயம்

image

விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள ஹோட்டல் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் வீட்டிலிருந்து கிராஃபிக் டிசைனர் வேலை செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி மகேஸ்வரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News June 15, 2024

சிவகாசியில் மின்தடை அறிவிப்பு!!

image

திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி, ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 18ம் தேதி திருத்தங்கல் நகர், செங்கமலநாச்சியார்புரம், கீழதிருத்தங்கல்,ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், நடுவப்பட்டி,ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரார்பட்டி,அதிவீரன்பட்டி,நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News June 15, 2024

விருதுநகர் அருகே மூன்று பேர் கைது

image

விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி புல்லலக்கோட்டை ரோடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்குள்ள சுந்திரலிங்க நகரில் விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்த சிவ சபரி பாலன், யானை குழாய் தெருவை சேர்ந்த அழகர் உள்ளிட்ட 3 பேர் 30 கிராம் கஞ்சா, 2 அரிவாள் மற்றும் கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

News June 14, 2024

விருதுநகர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் ஆட்சியர் முனைவர் ஜெயசீலன்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில் வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் தனிநபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News June 14, 2024

ஜூன் 21-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 21ஆம் தேதி காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News June 14, 2024

விருதுநகரில் 114 கடைகளுக்கு சீல் வைப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க 4000 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 158 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 3 மாதத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News June 13, 2024

உயர்கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்கிய ஆட்சியர்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேருவதற்கான உதவிகள் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

News June 13, 2024

விருதுநகர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட பிற போதைப் பொருட்களை கடத்துபவர்கள், பதுக்குபவர்கள் , விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பல்வேறு குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

News June 13, 2024

விருதுநகர் ஆட்சியரை சந்தித்த மாணவர்கள்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த சஞ்சய்ராஜ் மற்றும் சிவ பிரியேசன் ஆகிய மாணவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

News June 13, 2024

விருதுநகரில் மாணவர்கள் தேர்வு

image

விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வு போட்டிகள் நடைபெற்றது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு படிப்புக்கு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 9 வகுப்பு முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!