India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் கந்தபுரம் பகுதியைச் சார்ந்தவர் சேதுராமசாமி (67). இவரது மகள் ஹரிப்பிரியா(27). இவருக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலை தட்டச்சு பயிற்சி செல்வதாக கூறிச் சென்ற ஹரி பிரியா தற்போது வரை வீடு திரும்பவில்லை. எனவே மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சேது ராமசாமி இன்று புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், மேலரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு இன்று விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் பூமிநாதன் என்பவர் வந்து மனைவி நாச்சி (46). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் தங்கப்பாண்டி என்பவருக்கும் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் தங்கப்பாண்டி குடும்பத்தார் ஐந்து பேர் சேர்ந்து நாச்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. டவுன் போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
திருச்சுழி அருகே வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (28). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாயக்கண்ணன் ஊரில் உள்ள கன்மாயில் குளிக்க சென்ற போது அவரை வழிமறித்த சுப்புராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவி இதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு சிங்கராஜாக்கோட்டை தெருவைச் சோ்ந்த வைரஜோதி மகன் சூா்யா வயது (22) பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஏப்ரல் 19 ம் தேதி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
சிவகாசி தென்றல் நகரை சேர்ந்தவர் சித்திரைஜோதி 75. இவர் நேற்று சிவகாசி சிறுகுளம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கிரேன் சித்திரை ஜோதியின் மீது பலமாக மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் கிரீன் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி சட்டமன்ற தொகுதி(205) மொத்தம் 233137 வாக்காளர்கள் எண்ணிக்கையை கொண்டதாகும். இதில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் 71.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 81,585 ஆண் வாக்களர்களும் , 84,837 பெண் வாக்களர்களும் , 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,66,430 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர் .
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவர் குமஸ்தா வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தெய்வனையை தவறாக பேசிய புகாரில், வினோத்தை ஸ்ரீவி. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாரிமுத்து புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டி உள்ளார். கடந்த 2ம் தேதி இரவு மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு வினோத்தை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட பாராளுமன்றத் தொகுதி வாக்கு பதிவு ஒரு மணி நிலவரப்படி 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக விருதுநகர் தொகுதியில் 40.19% வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 39.33% வாக்குகளும், திருமங்கலம் தொகுதியில் 41.70% வாக்குகளும், சாத்தூர் தொகுதியில் 44.32% வாக்குகளும், சிவகாசி தொகுதியில் 36.14% வாக்குகளும், அருப்புக்கோட்டை – தொகுதியில் 41.31% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.