India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து சூலக்கரையில் உள்ள அரசினர் தொழிற்பெயர்ச்சி நிலையத்தில் நாளை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலைநாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
சாத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வின்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரிடம் தனது மகன் மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை கேட்டு வந்த பயனாளி ஒருவரிடம் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ஜெயசீலன் உடனடியாக அந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி தொகை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர
விருதுநகர் மாவட்ட பாஜக பார்வையாளர் வெற்றிவேல் இவர் சாத்தூர் சென்று விட்டு விருதுநகருக்கு வருவதற்காக நான்கு வழி சாலையில் ஆர்ஆர்நகர் அருகே நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்டர் மீடியனில் புல்களை மாடு மேய்ந்து விட்டு மேற்குப் பக்கம் செல்வதற்காக சாலையை கடந்தது. அப்பொழுது வேகமாக வந்த கார் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து 28 புகார் மனுக்கள் பெறப்பட்டு, மேற்படி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தார்.
சிவகாசி அருகே பூவநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோசலை (65).இவர் நேற்று சுந்தரராஜபுரத்தில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் பூவநாதபுரதிற்கு அரசு பேருந்தில் வந்துள்ளார்.அப்போது கோசலை அருகில் அமர்ந்திருந்த பெண் கோசலை அணிந்திருந்த 4 பவுன் செயின் அறுந்துள்ளதாக கழட்டி பையில் வைக்க சொல்லியுள்ளார்.அதைக் கேட்டு பையில் வைத்த செயினை வீட்டில் வந்து பார்த்தபோது செயின் மாயமானது தெரியவந்தது.
சாத்துார் விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள பள்ளத்தில் தேங்கிய கழிவுநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இச்சாலையில் தீப்பெட்டி பண்டல் ஏற்றி வரும் லாரிகள்,லோடு வேன்கள்,இருசக்கர வாகனங்கள் அடிக்கடி இவ்வழியாக நகருக்கு வந்து செல்கின்றன.சர்வீஸ் ரோட்டில் மிகப்பெரிய பள்ளம் உள்ள நிலையில் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு போலீஸ் துறையில் 1999இல் இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் ஸ்டேஷன்களில் ஏட்டுகளாக பணியாற்றியவர்கள் எஸ்எஸ்ஐ பதவி உயர்வுக்காக காத்திருந்தனர். இவர்களுக்கு ஜூன் 1ல் வழங்க வேண்டிய பதவி உயர்வு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று 63 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கி மதுரை டிஐஜி ரம்யா பாரதி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.