Virudunagar

News April 25, 2024

விருதுநகர்: மது விற்பனை செய்த நபர் கைது

image

விருதுநகர் அருகே இளங்கோவன் தெரு பகுதியில் இன்று கிழக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சேதுராமன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சேதுராமன் என்பவரை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 25, 2024

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு ஊர்வலம் டீன் சீதாலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் செவிலியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

News April 25, 2024

லாரியில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள் கடத்தல்

image

திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.‌

News April 25, 2024

லாரியில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள் கடத்தல்

image

திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.‌

News April 25, 2024

விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டம், குழந்தைகள் நலத்துறை மற்றும் மனநல துறை சார்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை பார்வையிட்டார்.

News April 25, 2024

விருதுநகரில் ஜப்தி

image

விருதுநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகாலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக இழப்பீடு கோரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நீதிபதி ஹேமந்தகுமார் கடந்த 2023 ஆம் ஆண்டு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். தற்போது வரை இழப்பீடு வழங்காததால் நேற்று ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.

News April 25, 2024

விருதுநகர்: கடைகளுக்கு அபராதம்

image

அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி சுகாதார அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பை பயன்படுத்தவும் அறிவுறுத்தினர்.

News April 25, 2024

ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை

image

ரயிலில் 2ம் வகுப்பு பொது பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுகாதாரமான சுவையான உணவு வழங்க ரயில்வே சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் விருதுநகர் ரயில் நிலையங்களில் 2ம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் நேற்று முதல் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த உணவகங்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

News April 25, 2024

விருதுநகர் அருகே இரு தரப்பினர் மோதல்: 9 பேர் மீது வழக்கு

image

விருதுநகர் அருகே தம்பநாயக்கன்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருத்தபாண்டி முருகன் முனியசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து நாட்டாமை ராஜாராம் என்பவரை மாற்ற சொல்லி தகராறு செய்து வந்துள்ளனர்.இதற்கு பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு

News April 25, 2024

உயர்கல்வி சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 2023- 2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெரும் மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

error: Content is protected !!