Virudunagar

News April 27, 2024

விருதுநகர்:நாடகம் பார்க்கச் சென்றவர் மீது தாக்குதல்

image

திருச்சுழி அருகே மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் பாண்டி (33). இந்நிலையில் பாண்டி தொட்டியாங்குளம் கிராமத்தில் நாடகம் பார்க்கச் சென்றதாகவும், அப்போது நாடக மேடை அருகே வைத்து தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து பாண்டியை கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாண்டி புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 26, 2024

விருதுநகர் ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது. வரும் மே 1 முதல் மே 11 வரை ஓவியம், கலை, போஸ்டர் தயாரித்தல், இணைய வழி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற உள்ளன. எனவே பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 26, 2024

விருதுநகர்: மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காரியாபட்டி அருகே சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேனேஜிங் டிரஸ்டி திருமதி சினேகா லதா பொன்னையா உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News April 26, 2024

விருதுநகர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பு

image

விருதுநகர் அருகே சூலக்கரை திரு.வி.க தெருவை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கோதை ஆண்டாள். இவர் இன்று காலை வீட்டு வாசலின் முன்பு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக மூதாட்டி கோதை ஆண்டாள் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 26, 2024

விருதுநகர் எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பு அருவி!

image

விருதுநகரின் பசுமையான கிழக்குப் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது செண்பகத் தோப்பு அருவி. இது உள்ளூர் வாசிகளின் குற்றாலமாக இருந்து வருகிறது. இதிலிருந்து வரும் சிற்றோடைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. இதன் வனப்பகுதி மேகமலை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வனத்திற்குள் கலந்து இருப்பதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது செண்பகத் தோப்பு.

News April 26, 2024

விருதுநகர்: சுட்டெரிக்கும் வெயிலில் வியாபாரம்

image

அருப்புக்கோட்டையில் சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு வெள்ளரிக்காய் விவசாயம் நடைபெறுவதால் வெயிலின் வெப்பத்திலிருந்து காக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிக்காய் வாங்கி செல்கின்றனர்.பஜார் பகுதியில் விவசாயிகள் சாலையோரம் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்கின்றனர்.ஒரு கட்டு வெள்ளரிக்காய் ரூ.10 முதல் ரூ.20 வரை இன்று விற்பனை செய்யப்படுகிறது.

News April 26, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கைது 

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் வாசுதேவன்(47) என்பவர் கட்டிட வரைபட அனுமதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரிடம் கட்டிட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வழங்க நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி (56), ரூ.10000 லஞ்சம் கேட்டதின் அடிப்படையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் பணத்தை கொடுக்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோதிமணியை கைது செய்தனர்.

News April 26, 2024

இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

image

திருச்சுழி அருகே தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு(23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பிரதீப் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தினேஷ் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 25, 2024

விருதுநகரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

விருதுநகர் சிவன் கோவிலில் வசித்து வருபவர் தேன் காமேஸ்வரன்(27). இவரது மனைவி பஞ்சவர்ணம்(27). இந்நிலையில் தேன் காமேஸ்வரன் அதிக மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக மனவேதனையில் இருந்த தேன் காமேஸ்வரன் கடந்த 24 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து பஜார் காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 25, 2024

விருதுநகரில் செடிகளுக்கு நீர் ஊற்றும் பணி தீவிரம்

image

விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டிராக்டர்கள் மூலம் சர்வீஸ் ரோட்டின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு நீர் இறைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாட்டி வதைத்து வரும் அனல் காற்று பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு செடிகளை காப்பதற்காக இந்த பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது இந்த பணிக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

error: Content is protected !!