Virudunagar

News March 17, 2024

சிவகாசி டி.எஸ்.பி அதிரடி மாற்றம்!

image

சிவகாசியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தலைமையின் தற்போது பழனி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பழனியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுப்பையா சிவகாசியின் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News March 16, 2024

விருதுநகர் அருகே மகளிர் தினம் கொண்டாட்டம்

image

ராஜபாளையம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 16ஆம் தேதி அய்யனார் கோயில் சாலையில் உள்ள மகளிர் என்ற ஒரு நாள் விவசாயி நகர்மன்ற தலைவி AAS பவித்ரா ஷியாம் தலைமையில் நகர்மன்ற மகளிர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு டிராக்டரில் மூலம் பயணம் செய்து வயலில் நாற்று நடவு, வயலில் நீர் பாய்ச்சல் போன்ற நகர மன்ற தலைவி நகரமன்ற உறுப்பினர்கள் விவசாயம் செய்து மகளிர் தினத்தை கொண்டாடினார்கள். விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

விருதுநகரில் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 16, 2024

விருதுநகர் அருகே மதுவால் ஏற்பட்ட விபரீதம் 

image

அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா. மணிகண்டன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போட்டு வந்துள்ளார் இதனால் அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (15.3.24) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மணிகண்டன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!