Virudunagar

News April 29, 2024

விருதுநகர்:முருகன்,கருப்பசாமி ஆகியோர் விடுதலை

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த வழக்கில் இருந்த முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்

News April 28, 2024

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நாளை தீர்ப்பு

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவி. மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

News April 28, 2024

விருதுநகர் மாவட்டத்தில் மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 28, 2024

விருதுநகரில் இலவச கண் சிகிச்சை முகாம் 

image

விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.பின்னர் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

News April 28, 2024

விருதுநகரில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

image

சாத்தூர் அருகே சத்யா காலனி பகுதி பகுதியைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(23). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது,புதிய பேருந்து நிலையம் இணைப்பு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது,  இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் மந்திரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 28, 2024

விருதுநகர் அருகே நுங்கு விற்பனை

image

சிவகாசியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஒரு நுங்கின் விலை 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் நுங்கு வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 28, 2024

விருதுநகர் அருகே விபத்து; தம்பதிகளின் நிலை?

image

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (62).நேற்று  சீனிவாசன் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் பைக்கில் திருச்சுழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பங்கஜம் பெட்ரோல் பங்க் அருகே பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 28, 2024

விருதுநகர்:விழாவை துவக்கி வைத்த கலெக்டர்

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று மகிழ் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற கலை மற்றும் இலக்கிய விழாவினை விருதுநகர் கலெக்டர் வீ.ப.ஜெயசீலன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் மகிழ் 24 என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

News April 27, 2024

நீர், மோர் பந்தல் திறப்பு

image

விருதுநகர், காரியாபட்டி என்.ஜி.ஓ நகர் பகுதியில் கோடை வெயிலை தவிர்க்க நண்பர்கள் சார்பாக சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நீர், மோர் பந்தலினை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் இன்று திறந்து வைத்து. பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி தண்ணீர் வழங்கினார்கள்.

News April 27, 2024

அருப்புக்கோட்டையில் இளைஞர்கள் மோதல்

image

அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெயக்குமாருக்கும் தம்மாந்தெருவை சேர்ந்த அம்பரேஷ் (27) என்பவருக்கும் இடையே பார்சல் டெலிவரி செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.டவுன் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!