India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் லோடுமேன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வி.வி.ஆர் சிலை அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(42). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரிமுத்து தனது வீட்டிலிருந்து கை காட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்தபோது, மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.அவர் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் நேற்று (01-04-24) தனது இருசக்கர வாகனத்தில் வத்திராயிருப்பு தாலுகா, வலையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி மீது மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து, ஸ்ரீவில்லி பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
சிவகாசி அருகே நடையனேரி தாழிகுளத்துபட்டியை சேர்ந்தவர் அய்யனார் 48. இவர் 6 பசு மாடுகள், 3 கன்று குட்டிகள் வைத்து விவசாயம் நடத்தி வருகின்றார். அய்யனார் தன் வீட்டின் அருகே மாடுகளுக்கு சமையல் கழிவுநீரை தேக்கி வைத்து அதனை நேற்று வழங்கியுள்ளார். அந்த நீரை குடிக்க இரண்டு பசு மாடுகள் திடீரென உயிரிழந்தது இதனால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். கால்நடை துறையினர் விசாரணை.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி பீமராஜா (26) சத்யா நகரை சேர்ந்த ஜோதீஸ்வரன் (23) ஆகியோரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இL புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அக்கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (02.04.2024) மாலை விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சித்துராஜபுரம், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராதிகா சரத்குமார் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே மலை பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (32). பஞ்சாலை தொழிலாளியான முத்துராஜ் மல்லம்பட்டி கண்மாய் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இந்த வழக்கில் விசாரணை செய்த தாலுகா போலீசார் முத்துராஜை கொலை செய்ததாக
17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை நேற்று மார்ச் 31 கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு முத்துராஜ் இணங்கவில்லை என்பதால் அவர்கள் முத்துராஜை கொலை செய்தது தெரியவந்தது.
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று மார்ச் 31 காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே 41வது பொருட்காட்சி நடைபெற அரசு தடை விதித்திருப்பது தெரிந்தும் அரசு உத்தரவை மீறி பொருட்காட்சி நடைபெற உள்ளது என சிலர் போஸ்டர் ஒட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பீடர் சாலையில் ராமநாதபுரம் மாவட்ட சர்வோதய சங்க கட்டிடத்தில் இலவம் பஞ்சு மெத்தை, பர்னிச்சர் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சர்வோதய சங்கங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், இன்று இங்குள்ள இலவம் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
Sorry, no posts matched your criteria.