India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவ்பர்கள்<
பெண் குழந்தைகளுக்கு 18 வயதும், ஆண் குழந்தைகளுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்து வைப்பதும், ஆதரிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர இயலாது. குழந்தை திருமணத்தை நடத்தி வைத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் 1098 அல்லது 181 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
பாரப்பத்தியில் தவெக மாநாடு நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை செல்லும் பொதுமக்கள் வாகனங்கள் ராம்நாடு ரிங்ரோட்டில் இருந்து திருப்பவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம்.
சிவகாசி பகுதியை சேர்ந்த 44 வயது பெண் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான தனது 14 வயது மகளுடன் தனியாக வசிக்கிறார். பட்டாசு ஆலையில் பணியாற்றி வரும் பெண்ணிற்கு அங்கு டிரைவராக வேலை செய்யும் மாரிக்காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாரிக்காளை மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகரில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 11 மணியளவில் புதிய ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும் விவசாயிகள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
விருதுநகர் மாவட்டத்தில் 38 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். A<
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958-ன் படி சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள் மற்றும் நிறு வனங்கள், 40 உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 77 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது சம்பளபட்டு வாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
விருதுநகர் மக்களே.. EMERGENCY நேரத்துல உங்க ஊரு GOVT HOSPITALக்கு போகும் போதே கால் பண்ணி அங்க தாமதம் ஏற்படாம ஒரு உயிரை காப்பாத்துங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722
அருப்புக்கோட்டை – 04566220264
இராஜபாளையம் – 04563221301
காரியாபட்டி – 04566255130
சாத்தூர் – 04562260215
சிவகாசி – 04562220301
திருச்சுழி – 04566282141
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220
Sorry, no posts matched your criteria.