India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் விருதுநகர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் வண்டல் மண் அள்ளுவதை ஓவர்சீயர்கள், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் முழுவீச்சில் கண்காணிக்க முடியாத சூழல் உள்ளது. விவசாயிகள் போர்வையில் அரசியல்வாதிகள் நுழைகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்காணிப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதன்படி ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகாசியில் 1200 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு ஆலைகளில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று ஆடி 1ஆம் தேதியை முன்னிட்டு அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலான பட்டாசு தொழிலாளர்கள் தங்களது குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை கண்ணாடி மணிகள், சுடுமண் பெண் உருவ பொம்மை, சங்கு வளையல்கள், காளை உருவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சங்கு வளையல் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளான முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகாசியில் இன்று ரயில்வே ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு SRMU மதுரை கோட்ட உதவி செயலாளர் சிவகாசி கிளை பொறுப்பாளர் சீதாராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்த இரயில்வே தொழிலாளர்களின் புதிய பென்சன் திட்டம் எனும் உத்தரவாதமற்ற மோசடி திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஜூலை 16) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது. அதன்படி, விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(7 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கடந்த 4 நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.