Virudunagar

News July 20, 2024

சிவகாசி: 4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் அழிப்பு

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கடந்த மே 28ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, சரவெடி பட்டாசுகளை அழித்து குடோனின் சீலை அகற்றிவிடலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட சரவெடி ரக பட்டாசுகளை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இன்று (ஜூலை 20) அழித்தனர்.

News July 20, 2024

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலி பணியிடங்கள்

image

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரு மூத்த ஆலோசகர், 2 வழக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றின் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணியிடங்களுக்கு முதுநிலை சமூகப்பணி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஜூலை.23 கடைசி நாள் ஆகும்.

News July 20, 2024

முகமூடி கொள்ளை கும்பலில் மேலும் ஒருவர் சரண்

image

தென்மாவட்டங்களில் ரயில்வே ட்ராக்கை ஒட்டியுள்ள தனி வீடுகளில் மங்கி குல்லா, கைகிளவுஸ் அணிந்து இரும்பு உளியை ஆயுதமாக பயன்படுத்தி வீட்டின் உரிமையளர்களை கட்டிப்போட்டு பல வருடங்களாக 68 க்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம் கும்பல் கொள்ளை அடித்தது. இதில் 8 பேரை கடந்த மாதம் விருதுநகர் போலீசார் கைது செய்தனர். இதில் தேடப்பட்டு வந்த ராம்பிரகாஷ் நேற்று ராஜபாளையம் நீதிமன்றத்தில் சடண் அடைந்தார்.

News July 19, 2024

விருதுநகர் மாவட்டத்தில் இரவு மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 19, 2024

சித்தப்பா வெட்டி கொலை: மகனுக்கு ஆயுள் தண்டனை

image

சாத்துார், மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (52). இவரது பங்காளி சண்முகவேலின் மகன் குருநாதன், 27. இருவருக்கும் இடையே சொத்து விவகாரத்தில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அந்தோணி ராஜை, குருநாதன் வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் குருநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

News July 18, 2024

சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை ஜூலை 19ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று(ஜூலை 18) விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 18, 2024

தேர்தல் முடிவு குறித்து விஜயபிரபாகரன் மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு எதிராக, தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு வழக்கு தாக்கல் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது 2 மணிநேரம் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திருப்தி இல்லையென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News July 18, 2024

BREAKING நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நவாஸ்கனி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக கூறி அவரது வெற்றியை எதிர்த்து சற்றுமுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார்.

error: Content is protected !!