Virudunagar

News April 18, 2024

விருதுநகர்: மின்சாரம் தாக்கி பலியான சோகம்!

image

தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் முருகராஜ் (38).இவருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் மடத்துப்பட்டியில் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மோட்டார் ஸ்விட்ச் ஆன் செய்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2024

விருதுநகர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

image

விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஏப்ரல் 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

News April 18, 2024

விருதுநகர் தொகுதி: இது உங்களுக்கு தெரியுமா!!

image

2019 மக்களவைத் தேர்தலில், விருநகர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 4,70,883 (43.8%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான உமையொருபாகம் 789 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

News April 18, 2024

ஆண்டாள் கோயிலில் ராமநவமி பூஜை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதியில்  ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளினர். அங்கு ராமநவமி வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

News April 18, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

விருதுநகர்: ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இன்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது‌ இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் யாரிடமும் பணம் & பரிசு‌ பெறாமல் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசி விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.‌ இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

விருதுநகர் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் 7,29,438 ஆண் வாக்காளர்களும், 7,64,760 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 202 பேர் என மொத்தம் 14,94,400 வாக்காளர்கள் வரும் 19 ம் தேதி வாக்களிக்க தயாராக உள்ளனர்.1,680 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக 186 வாக்குச்சாவடிகளும், 2 பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு அளித்தார்.

News April 17, 2024

விருதுநகரில் விஜய பிரபாகரன் உருக்கம்

image

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்து வந்த நிலையில், விஜய பிரபாகரன் பேசுகையில், எங்க அப்பாவுடைய ஆசையையும், கனவையும், நிறைவேற்றுவதற்கு ஒரு வழி எனக்கு கிடைத்திருக்கிறது.
கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று எங்க அப்பாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் கூறினார்.

News April 17, 2024

விருதுநகரில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

image

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மேற்கு காவல் நிலைய போலீசார் நேற்று மாலை ரவுண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் பாக்கியராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாக்யராஜ் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!