Virudunagar

News April 21, 2024

விருதுநகர்:இளைஞர் மீது தாக்குதல்

image

திருச்சுழி அருகே வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (28). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாயக்கண்ணன் ஊரில் உள்ள கன்மாயில் குளிக்க சென்ற போது அவரை வழிமறித்த சுப்புராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 20, 2024

ராஜபாளையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது

image

ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவி இதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு சிங்கராஜாக்கோட்டை தெருவைச் சோ்ந்த வைரஜோதி மகன் சூா்யா வயது (22) பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஏப்ரல் 19 ம் தேதி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News April 20, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில்  மரணம் 

image

சிவகாசி தென்றல் நகரை சேர்ந்தவர் சித்திரைஜோதி 75. இவர் நேற்று சிவகாசி சிறுகுளம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கிரேன் சித்திரை ஜோதியின் மீது பலமாக மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் கிரீன் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2024

வாக்களித்த 1லட்சத்து 66 ஆயிரம் பேர்!

image

சிவகாசி சட்டமன்ற தொகுதி(205) மொத்தம் 233137 வாக்காளர்கள் எண்ணிக்கையை கொண்டதாகும். இதில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் 71.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 81,585 ஆண் வாக்களர்களும் , 84,837 பெண் வாக்களர்களும் , 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,66,430 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர் .

News April 19, 2024

ஸ்ரீவி: குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவர் குமஸ்தா வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தெய்வனையை தவறாக பேசிய புகாரில், வினோத்தை ஸ்ரீவி. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாரிமுத்து புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டி உள்ளார். கடந்த 2ம் தேதி இரவு மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு வினோத்தை கைது செய்தனர்.

News April 19, 2024

விருதுநகர்: 1 மணி நிலவரப்படி 40.45 % வாக்கு பதிவு

image

விருதுநகர் மாவட்ட பாராளுமன்றத் தொகுதி வாக்கு பதிவு ஒரு மணி நிலவரப்படி 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக விருதுநகர் தொகுதியில் 40.19% வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 39.33% வாக்குகளும், திருமங்கலம் தொகுதியில் 41.70% வாக்குகளும், சாத்தூர் தொகுதியில் 44.32% வாக்குகளும், சிவகாசி தொகுதியில் 36.14% வாக்குகளும், அருப்புக்கோட்டை – தொகுதியில் 41.31% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

விருதுநகர்: ஜனநாயக கடமையாற்றிய கலெக்டர்

image

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட
ஆட்சித்தலைவருமான வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூரைக்குண்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று(19.04.2024) தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News April 18, 2024

விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

விருதுநகர் மக்களே நாளை இதை செய்யுங்கள்

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது ஏதேனும் குறைகளோ அல்லது புகார் இருந்தால், அது குறித்து 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

News April 18, 2024

விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

image

மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!