India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி, புதூரை சேர்ந்தவர் நாகவள்ளி(47). நாகவள்ளி தனது மகனுடன் பைக்கில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டியாங்குளம் விஷ்வாஸ் பள்ளி அருகே அவ்வழியாக வந்த மற்றொரு பைக் மோதி நாகவள்ளி & அவரது மகன் இருவரும் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று அரசு பேருந்துகள், அனைத்து அரசு வாகனங்களிலும் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி பகுதியில் நேற்று குடியிருப்பில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 35, மற்றும் ராஜேந்திரன் 28 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்பி மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆதரவாக தேர்தல் களப்பணியை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக துவங்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் C-VIGIL என்ற தொலைபேசி செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதி சேர்ந்த தாமரைச்செல்வி இவர்
அருகே உள்ள விவசாயி பகுதிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின் பெட்டியில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது வீடு திரும்பிய தாமரைச்செல்வி இவர் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்து 13 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். இந்த சம்பவத்தில் மார்ச் 16ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிவகாசியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தலைமையின் தற்போது பழனி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பழனியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுப்பையா சிவகாசியின் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.