India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர், தேர்தலை முன்னிட்டு அச்சடிக்கப்படும் போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.விதியை மீறினால் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127ன் கீழ் 6 மாதம், இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். மாவட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி மற்றும் விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து மாலை 5 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளான திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரசும் பாஜகவும் விருதுநகர் உள்ளிட்ட எட்டு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதிகா சரத்குமார்,விருதுநகர் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சார்பில் விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நேற்றுமுன்தினம் ஒரு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.நேற்று வேட்புமனு தாக்கலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே 3 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனுவில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் ஆரம்பித்துள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் வெப்பக்காற்று தாக்கத்தால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவுரைகளை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கியுள்ளார். லேசான இளம்வண்ண தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், சூரிய ஒளியில் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பிற்கான கண்ணாடி, குடை, தொப்பி, காலணிகள் அணிதல், அதிகளவில் தண்ணீர் குடித்தல் போன்றவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட விவேகானந்தர் காலனியில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் விபத்து ஏற்பட்டு வருவதால் சாலையை சீரமைக்க கோரி ஏற்கனவே மனு அளித்தும் சாலை சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை செங்கமலநாச்சியார்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். இது போன்ற நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது என்பதால் காலம் தாழ்த்தாமல் துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் நடுகாடான் (65).அவரது மகன் மணிகண்டன் (35) நேற்று(மார்ச்.20) இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மகன் மணிகண்டன் அவரது தந்தை நடுக்கடானை கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.