Virudunagar

News April 25, 2024

விருதுநகரில் ஜப்தி

image

விருதுநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகாலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக இழப்பீடு கோரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நீதிபதி ஹேமந்தகுமார் கடந்த 2023 ஆம் ஆண்டு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். தற்போது வரை இழப்பீடு வழங்காததால் நேற்று ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.

News April 25, 2024

விருதுநகர்: கடைகளுக்கு அபராதம்

image

அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி சுகாதார அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பை பயன்படுத்தவும் அறிவுறுத்தினர்.

News April 25, 2024

ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை

image

ரயிலில் 2ம் வகுப்பு பொது பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுகாதாரமான சுவையான உணவு வழங்க ரயில்வே சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் விருதுநகர் ரயில் நிலையங்களில் 2ம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் நேற்று முதல் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த உணவகங்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

News April 25, 2024

விருதுநகர் அருகே இரு தரப்பினர் மோதல்: 9 பேர் மீது வழக்கு

image

விருதுநகர் அருகே தம்பநாயக்கன்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருத்தபாண்டி முருகன் முனியசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து நாட்டாமை ராஜாராம் என்பவரை மாற்ற சொல்லி தகராறு செய்து வந்துள்ளனர்.இதற்கு பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு

News April 25, 2024

உயர்கல்வி சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 2023- 2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெரும் மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

News April 24, 2024

விருதுநகர்: அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

விருதுநகரில் டாஸ்மாக் மூடல்!

image

மே 1ஆம் தேதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாள், தொழிலாளர் தினம், பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள், எட்டு மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டார்.

News April 24, 2024

விருதுநகர் லோக்சபா தேர்தலில் 3,278 புகார்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை மட்டும் சி விஜில் செயலி, ஆன்லைன், தொலைபேசி ஆகியவை வாயிலாக 3,278 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி பெற்ற புகார்களாக எடுக்கப்பட்ட 3059 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.

News April 24, 2024

விருதுநகர்:தேர்தல் நாளில் 117 அலுவலர்கள் ஆப்செண்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அலுவலர்கள் ஆப்சென்ட் ஆகினர் . விருதுநகர் மாவட்டத்தில் 9243 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஓட்டு சாவடி தலைமை அலுவலர் 1, அலுவலர் 2, 3 என்ற பணி நிலைகளில் நியமிக்கப்பட்டனர். 7206 பணியிடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 117 அலுவலர்கள் வரை பல்வேறு நிலைகளில் ஆப்சென்ட் ஆகினர்.

News April 24, 2024

விருதுநகர்: மின்சாரம் தாக்கி மாணவர் பலி

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் கல்யாண குமார் (19) இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீவிருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!