Virudunagar

News April 25, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 29 காலி பணியிடங்கள் உள்ளன. இளங்கலை பட்டம் பெற்ற 21 – 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 25, 2025

கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நாவுபாடா(19) என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவரின் உடல் விருதுநகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

ஸ்ரீவி கொலையில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை 

image

ஸ்ரீவி அருகே பாட்டக்குளம் அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(29). இவர் அதே பகுதியில் பெண்களை கேலி செய்து, தவறாக நடந்து வந்த லாரன்ஸ் என்ற யோகராஜ்(21) என்பவரை  கண்டித்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதில் கடந்த 2021-ம் ஆண்டு முருகனை யோகராஜ் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி யோகராஜ்க்கு ஆயுள் சிறை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

News April 24, 2025

UPSC தேர்வில் சிவகாசியை சேர்ந்த இருவர் சாதனை

image

சிவகாசியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியைச் சேர்ந்த கோகுல கண்ணன் இருவரும் UPSC தேர்வில் வெற்றி பெற்று விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் வெற்றி விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விஷயம். சிவகாசியில் பிரதான தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை மட்டும் நம்பி இருக்காமல் மாற்று தொழிலையும் ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களின் ஆசையாக உள்ளது.Share.

News April 24, 2025

திருச்சி செல்லும் ஆண்டாள் சூடிய மாலை பட்டு வஸ்திரம்

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது நம் பெருமாள், ஆண்டாள் கூடிய மாலை அணிந்து எழுந்தருளுவது வழக்கம். இதற்காக இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகியவை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

News April 24, 2025

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

image

சிவகாசி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் (25) என்ற இளைஞர் அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவி மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் மாணவியை மீட்ட போலீசார் மாரீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 24, 2025

விருதுநகரில் கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்

image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் +2 பொது தேர்வு எழுதிய மாணவர்களின் 100% உயர்கல்வி சேர்க்கையை வலியுறுத்தி ஏப்.27 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் மே.1க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள +2 தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9698810699 இல் அழைக்கலாம்.

News April 23, 2025

விருதுநகரில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 23, 2025

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

image

விருதுநகர் அருகே மார்த்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் தனது வீட்டின் மின் மீட்டர் பெட்டியை இடமாற்றம், பெயர் மாற்றம் செய்யக்கோரி சூலக்கரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ரூ.1000 லஞ்சம் பெற்றதாக 3.1.2012 அன்று கைது செய்யப்பட்டார். இதில் கனகராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News April 22, 2025

வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

image

மல்லி அருகே நாகபாளையத்தில்,குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் நிலத்துக்கான பட்டா சண்முகத்தேவர் மற்றும் தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேறொரு பெயரில் முறைகேடாக பட்டா பதிவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்ரீவி.வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!