Virudunagar

News April 30, 2024

மே 3 முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி..!

image

சிவகாசியில் முதன் முறையாக பர்னிச்சர் எக்ஸ்போ 2024 நடைபெற உள்ளது. விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள கம்மவார் திருமண மஹாலில் மே 3 முதல் மே 12 வரை 10 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனுமதி இலவசம் என்பதால் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்டுள்ளது . இதில் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் பல்வேறு புதிய வகையில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

News April 30, 2024

சிவகாசி மக்களை குளிர்வித்த சாரல் மழை

image

சிவகாசியில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பெய்த சாரல் மழையால் பூமி நன்கு குளிர்ந்து இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கத்தில் இருந்து வந்த மக்களுக்கு நேற்று பெய்த சாரல் மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 29, 2024

விருதுநகர் ஆட்சியர் முக்கிய தகவல்

image

2024 ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது எதிர்வரும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2024க்கு தகுதியானவர்கள் (www.sdattn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

விருதுநகர்: நிர்மலா தேவிக்கு தண்டனை அறிவிப்பு

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக – கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பேராசிரியை நிர்மலா தேவி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவிக்கு தண்டனை விவரங்கள் நாளை வெளியாகும் என ஸ்ரீவி மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.

News April 29, 2024

விருதுநகர்:முருகன்,கருப்பசாமி ஆகியோர் விடுதலை

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த வழக்கில் இருந்த முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்

News April 28, 2024

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நாளை தீர்ப்பு

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவி. மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

News April 28, 2024

விருதுநகர் மாவட்டத்தில் மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 28, 2024

விருதுநகரில் இலவச கண் சிகிச்சை முகாம் 

image

விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.பின்னர் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

News April 28, 2024

விருதுநகரில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

image

சாத்தூர் அருகே சத்யா காலனி பகுதி பகுதியைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(23). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது,புதிய பேருந்து நிலையம் இணைப்பு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது,  இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் மந்திரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 28, 2024

விருதுநகர் அருகே நுங்கு விற்பனை

image

சிவகாசியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஒரு நுங்கின் விலை 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் நுங்கு வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!