Virudunagar

News May 27, 2024

விருதுநகர்: சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் குறிப்பு!

image

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 480 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது வனவிலங்கு சரணாலயம். இது அதிக அளவில் சாம்பல் நிற அணிகள் வாழ்ந்து வருகின்றன. அதனால் இந்த சரணாலயம் சாம்பல் நிற அல்லது நரைத்த அணில்கள் சரணாலயம் என்றும் அழைக்கப்பட்டு வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. இந்த பகுதியில் அணில்கள் மட்டுமின்றி யானை, புலி,வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, தேவாங்கு போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.

News May 27, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணி (65).கூலி வேலை செய்து வந்த மணி ஹோட்டலில் சாப்பிடுவதற்காக திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது ஜீவா லாட்ஜ் எதிரே அவ்வழியாக வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் நேற்று  விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 27, 2024

விருதுநகரில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் பத்து மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை விருதுநகர் எம் எல் ஏ சீனிவாசன் துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News May 26, 2024

விருதுநகரில் பெண்களுக்கான மெகா பிசினஸ் எக்ஸ்போ

image

விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் விருதை பாரதிகள் மற்றும் டைனமிக் ஜிம் சார்பாக மெகா பிசினஸ் எக்ஸ்போ -2024 என்ற தலைப்பில் பெண்களுக்கான தொழில் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 32 வகையான தொழில்கள் குறித்த படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

News May 26, 2024

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு பதிவு

image

திருச்சுழி அருகே பூவாகனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பையா(81). முதியவர் சின்ன கருப்பையாவுக்கும் அவரது மகன் பாலகுருவுக்கும் இடையே சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.‌ இந்நிலையில் இந்த பிரச்சனையில் சின்ன கருப்பையாவை பாலகுரு உள்ளிட்ட இருவர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.‌ இது குறித்து நரிக்குடி போலீசார் நேற்று மே 25 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.‌

News May 26, 2024

விருதுநகர் அருகே பைக் சாகசத்தால் நேர்ந்த பரிதாபம்!

image

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் இன்று மாலை பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இளைஞர் கருப்பசாமி தன் நண்பருடன் பைக்கில் சாகசம் செய்தபடி பேருந்தின் முன்பக்கத்தில் மோதினார். இதில் கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 25, 2024

விருதுநகர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மத்திய அரசு சார்பாக தேசிய அளவில் வீர தீரமிக்க செயல் புரிந்தவர்களுக்கு டென்சிங் நார்கே விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு துணிச்சலான நடவடிக்கைகள் செய்தமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை http://awards.gov.in மூலம் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் பிரபு என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலில் மூழ்கி இறந்துள்ளார். அன்னாரது வாரிசுதாரரான அவரது தாய் தமிழ்ச்செல்வி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.

News May 25, 2024

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அமைப்பு சாரா நிறுவனங்கள் தன்னார்வலர்கள் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

News May 25, 2024

விருதுநகரில் இலவச இருதய மருத்துவ முகாம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பாக இலவச இருதய மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார்.

error: Content is protected !!