Virudunagar

News May 30, 2024

ஆறுதல் தெரிவித்த விருதுங்கர் எம்பி 

image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் தடுமாறி விழுந்ததில் தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் பரிபூரணமாய் குணம் அடைந்திடவும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவும்,மீண்டும் நாடாளுமன்றத்தில் சிம்ம குரல் ஒலிக்க இறைவனை வேண்டுவதாக நேற்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

விருதுநகரில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 13 புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தினார்.

News May 29, 2024

விருதுநகர்: விவசாயிகளே இதை கவனியுங்கள்

image

சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதையானது விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பெறலாம் என சிவகாசி வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவள்ளி இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

திருசுழியில் இளைஞர் வெட்டிக்கொலை!

image

விருதுநகர், திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை பார்க்கச் சென்ற கருப்பையாவை மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 29, 2024

விருதுநகர்: சிறுவனை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

image

விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் மூர்த்தி. இவரது 17 வயது மகன் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த சிவா, k.முனீஸ்வரன், b.முனீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் மது போதையில் சிறுவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு மது பாட்டிலால் சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 29, 2024

விருதுநகர் ஐய்யனாய் அருவி சிறப்புகள்!

image

விருதுநகரில் உள்ள அய்யனார் அருவி இராஜபாளையம் நகரிலிருந்து 10 கிமீ மேற்கே அமைந்துள்ளது. இந்த அருவி வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர் பெருக்கு அதிகரிக்கும். இந்த அருவி நீரானது இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்கிறது. மலையடிவாரத்தில் பழையாறு, நீராறு ஆகிய ஆறுகள் சேருமிடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீர்காத்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது.

News May 29, 2024

விருதுநகர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒருவர் பலி

image

ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூா் சோ்ந்த விக்னேஸ்வரன்.இவா் குலசேகரப்பேரி கண்மாய் அருகே தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாா்.வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் இவரது உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தனா்.ஆடைகள் கிணற்றின் அருகே கிடந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விக்னேஸ்வரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தளவாய்புரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News May 28, 2024

விருதுநகர்:16 பெட்டிக்கடைகளுக்கு ரூபாய் 4 லட்சம் அபராதம்

image

மாவட்டத்தில் தடை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை போலீசார் இணைந்து மே 19 முதல் மே 25 வரை பெட்டிக்கடைகள் வாகனங்களில் சோதனை செய்தனர். இதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக பெட்டிக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூபாய் 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News May 28, 2024

விருதுநகர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்திலிருந்து பல்வேறு வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு சட்ட விரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.எனவே சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார்.

News May 27, 2024

விருதுநகரில் ரூ.4 லட்சம் அபராதம்!

image

விருதுநகரில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் 16 பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!