Virudunagar

News May 3, 2024

விருதுநகர் மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 107.6 டிகிரி வெயில்

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் 104 டிகிரி தாண்டி உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 107.6 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு சாலைகள் வெறிச்சோடியது. மேலும் அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் வெப்பம் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News May 3, 2024

விருதுநகர் பிளவக்கல் அணை சிறப்பு!

image

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான அணையாக இருக்கிறது பிளவக்கல் அணை. சிறப்புமிக்க இந்த அணை மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வெயிலை மட்டுமே பார்த்து வரும் கந்தக பூமி மக்களுக்கு இயற்கை வனப்புமிக்க இந்த பிளவக்கல் அணை ஒரு வரப்பிரசதமாய் விளங்குகிறது. இதன் அருகில் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த அணை ரூ.20 லட்சத்தில், 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

News May 3, 2024

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

image

விருதுநகர் அருகே ஓ. முத்தலாபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து பாண்டித்துரை என்பவரின் வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீஸார் பாண்டிதுரையை கைது செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 2, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு

image

நீட் இளங்கலை மருத்துவர் கல்விக்கான நுழைவுத் தேர்வின் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மருத்துவம் மற்றும் பிற மருத்துவம், பாராமெடிக்கல் படிப்புகளுக்கு நீட் இளங்கலை மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மே 5ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை 3462 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

News May 2, 2024

விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு!

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 2, 2024

விருதுநகர்:97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் சட்ட விதிகளை  பின்பற்றாமல்,தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 56 கடைகள், 32 உணவக நிறுவனங்கள், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 12 லட்சம் நிவாரணம்!

image

காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் நேற்று மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் கல்குவாரி நிர்வாகம் சார்பாக தலா 12 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 50,000 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாகவும், 11.50 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.

News May 2, 2024

BREAKING கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

image

கரியாபட்டி அருகே நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் கல்குவாரியின் உரிமையாளர் சேது நேற்று கைது செய்யப்பட்டார். வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ராம்ஜி, ராமமூர்த்தியை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

News May 2, 2024

சிவகாசியில் துவங்கிய புத்தக கண்காட்சி!

image

சிவகாசியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமுஎகச மற்றும் ஜே.சி.ஐ சிவகாசி டைனமிக் இணைந்து நடத்தும் கோடைகால புத்தக கண்காட்சி நேற்று முதல் துவங்கியுள்ளது. புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த மேயர் சங்கீதா இன்பம் புத்தக அரங்கினை பார்வையிட்டார். இதில் 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!