India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டி பகுதியில் இன்று விருதுநகர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே ஆண்டில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் 10 கோடி பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் முறையான முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் சம்பந்தமாக விளம்பரங்கள் வெளியிட விரும்புவோர் வரும் 17ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திக்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சிவகாசியில் 7 செ.மீட்டரும், வேம்பக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர் AWS, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் 4 செ.மீட்டரும், சாத்தூர், விருதுநகர் பகுதியில் 3 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 2 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் தான் பிரபலமானது என நினைக்கிறார்களா..? ஆர்.ஆர்.நகர் அடுத்த கன்னிசேரி புதூரில் செய்யப்படும் கருப்பட்டி மிட்டாய் பெயர் பெற்றது. குறிப்பாக செந்நெல்குடி, பட்டம் புதூர், கன்னிசேரி புதூர் ஆகிய ஊர்களில் திருவிழா சமயங்களில் சீரனி மிட்டாய் கடைகள் அதிகமாக காணப்படும்.
விருதுநகர் ஆணைக் குழாய் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(24). இவரிடம் பொதுப்பணி துறையில் ஜூனியர் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த ரவீந்திரன், கோவையைச் சேர்ந்த உஷாராணி, காஞ்சிபுரத்தை சேர்ந்த கௌரிசங்கர் ஆகியோர் 6.85 லட்சத்தை பெற்று போலி நியமன ஆணையை வழங்கி உள்ளனர். இதுகுறித்து ஊரக போலீசார் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. விருதுநகர் மாவட்டதில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி வரும் 13ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஜிஎஸ்டி என்னும் நெருப்பின் மூலம் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை சிதறடித்த பாஜகவை எங்கள் ஆதரவு உங்களுக்கு இல்லை” இப்படிக்கு ஜிஎஸ்டி நலிவடைந்த பொதுமக்கள் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
செவல்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம் , அன்னபூரணியாபுரம், கொட்டமடக்கிபட்டி , அலமேல்மங்கபுரம், துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் 1 மணியளவில் பலத்த மழை பெய்தது. வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று தென்றல் வருடும் போல வீசுவதால் சுற்று வட்டார பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.