India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் +2 பொது தேர்வில் 9,743 மாணவர்களும் 11,534 மாணவிகளும் என மொத்தம் 21,277 தேர்வு எழுதியுள்ளனர். இன்று வெளியான தேர்வு முடிவில் 9,251 மாணவர்களும் (94.95%) 11,311 மாணவிகளும் (98.07.%) என மொத்தம் 20,562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் மொத்தம்: 96.64% ஆகும். இதன் மூலம் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 5ம் இடம் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக குவாரிகளின் நடைபெற்ற ஆய்வில் 5 பாறைகளில் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் செயல்படும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்ட விதிகளை மீறி செயல்படும் வாரிசு குத்தகைதாரர்களின் மீது தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் நல்ல கருங்கண் (29).இவர் அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் காட்டுப் பகுதியில் கிடை அமைத்து அதில் ஆடுகளை கட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.இந்நிலையில் இந்தக் கிடையில் திடீரென தீ பிடித்து கிடையில் இருந்து 30 குட்டி ஆடுகள் தீயில் எரிந்து கருகி உயிரிழந்தன.இதுகுறித்து நல்ல கருங்கண் புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று பட்டாசு மற்றும் வெடிபொருள் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, சட்டத்திற்கு புறம்பாக உரிய அனுமதியோ உரிமம் இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் 31 வரை ஓராண்டில் மட்டும் கிணறு, கண்மாய்கள், தெப்பம் என நீர் நிலைகளில் குளிக்கச் சென்று தடுமாறி தவறி விழுந்து என பல வகைகளில் 70 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 60 சதவீதத்திற்கும் மேல் பள்ளி கல்லூரி மாணவர்களை உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்ட நிலையில் நீர்நிலை விபத்துக்களை தடுப்பது அவசியமாகியுள்ளது.
தாயில்பட்டி அருகேயுள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கணித பேராசிரியர் ராம் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன் நிர்வாக உரையாற்றினார். பெற்றோர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள உறவை பற்றியும் பெற்றோர்களை மதிப்பது குறித்து விளக்கப்பட்டது
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் அய்யனார் (65).அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலையில் 11 ஆண்டுகளாக காவலாளியாக பணி செய்துள்ளார்.கடந்த 10 மாதத்திற்கு முன் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அய்யனார் அவருக்கான வருங்கால வைப்பு நிதியை பெற 10 மாதமாக முயற்சித்தும் கிடைக்காத விரக்தி ஆலைக்குள் இன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 573 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு கடந்த 1.7.23 முதல் தினசரி ஊதியமாக 490 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே 1 முதல் விருதுநகர் ஒன்றியத்தில் 23 மஸ்தூர் பணியாளர்களும், மற்ற 10 ஒன்றியங்களில் தலா 20 பணியாளர்கள் என 223 பணியாளர்களுக்கு மட்டுமே தினசரி வேலை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 120 ஏக்கரில் கேந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானவாரி நிலங்களில் கிணற்றுப் பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டது. கிணற்றில் தண்ணீர் வற்றியதன் காரணமாகவும் தொடர் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கேந்தி பூச்செடிகள் வாடி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருதுநகர், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இன்று (3.5.2024) சிறப்பு கோடைகால தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். பின்னர் மாணவ மாணவியருடன் கலந்துரையாடிய ஆட்சியர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.