Virudunagar

News April 17, 2024

பட்டாசு கடைகளை மூட அதிரடி உத்தரவு!

image

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை
மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 16, 2024

விருதுநகரில் பட்டாசு கடைகள் மூடல்

image

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பட்டாசு கடைகளை நாளை முதல் ஏப்ரல்.20 ஆம் தேதி வரை, ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்கள் இயங்க தடை மேலும் மீறி பட்டாசு கடைகள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 16, 2024

விருதுநகர்: கொண்டாடிய வாக்காளர்கள்!

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு ஏப்ரல் 19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடன் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக்கினை வெட்டி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் வாக்காளர்கள் பிறந்தநாள் கொண்டாடினார்கள்.

News April 16, 2024

விருதுநகர் அருகே லட்சக்கணக்கில் சிக்கிய பணம்

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சந்தோஷ் என்பவர் ஓட்டிவந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ரூ.8,70,000/- ஆவணம் இன்றி பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செயது வட்டாட்சியரிடம் வழங்கினர்.

News April 16, 2024

விருதுநகர் அருகே 10 பேர் சிக்கினர்

image

சிவகாசி அருகே மாரனேரி சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சின்ன முத்தையா (54). இவர் சில நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த ஊர் பொதுக்கூட்டத்தில் நாட்டாமையை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சின்ன முத்தையாவை நாட்டாமை பெருமாள் குடும்பத்தினர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.காயமடைந்த சின்ன முத்தையா  புகாரில் 10 பேர் மீது வழக்கு.

News April 16, 2024

விருதுநகர் அருகே 10 பேர் சிக்கினர்

image

சிவகாசி அருகே மாரனேரி சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சின்ன முத்தையா (54). இவர் சில நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த ஊர் பொதுக்கூட்டத்தில் நாட்டாமையை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சின்ன முத்தையாவை நாட்டாமை பெருமாள் குடும்பத்தினர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.காயமடைந்த சின்ன முத்தையா  புகாரில் 10 பேர் மீது வழக்கு.

News April 15, 2024

கலெக்டர் தலைமையில் காபி வித் கலெக்டர்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் பயிலும் 170-க்கும் மேற்பட்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் சிறப்பு காபி வித் கலெக்டர் 70 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

News April 14, 2024

விருதுநகர: மூலிகை கிட்டங்கியில் தீ விபத்து!

image

வெம்பக்கோட்டை அருகே எட்டக்காப்பட்டியில் உள்ள தனியார் மூலிகை தயாரிப்பு கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயற்கை மூலிகை பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 14, 2024

விருதுநகரில் நடமாடும் மாதிரி வாக்குப்பதிவு மையம்

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குபதிவு வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மாதிரி வாக்குப்பதிவு மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News April 14, 2024

விருதுநகர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருச்சுழி அருகே கனையமறித்தான் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன்(58). இவர் நேற்று தேளி – தர்மம் சாலையில் ஆட்டோ ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது  திடீரென ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.‌ இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!