India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (31). இவரது குடும்பத்தாருக்கும் அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் குடும்பத்தாருக்கும் ஊர் பொங்கல் விழாவில் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முன் விரோதம் காரணமாக இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறிதாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. தாலுகா போலீசார் நேற்று இரு குடும்பத்தை சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
சிவகாசி பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 9ம் நாள் திருவிழாவான இன்று பத்திரகாளியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் வீதியில் வீதியுலா வந்த பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் அம்மனை வழிபட்டனர்.
தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கும் தமிழக அரசின் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களை awards.fametn.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொடை வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் அடுத்த இரு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
காரியாபட்டி காவல் நிலையத்தை சுற்றி 100 மீட்டருக்கு பட்டாசு வெடிக்க, மேளதாளம் முழங்க வனத்துறை தடை விதித்துள்ளது. காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஆலமரத்தில் பழந்தின்னி வௌவ்வால்கள் தங்கி வரும் நிலையில் அவற்றை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி அருகே அதிவீரன்பட்டியை சேர்ந்த அய்யனார்-ஜெயலட்சுமி தம்பதியின் மகன் A.J.சரண் சந்ரேஷ். ஏழாம் வகுப்பு மாணவரான இவர் சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அப்துல் கலாம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் அரசமர இலையில் அப்துல்கலாமின் திருவுருவத்தை தத்துருவமாக ஓவியமாக வரைந்து அசத்தியுள்ள மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம், தேவர்குளம் ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32.80 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (06.5.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
விருதுநகர், சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் குடோனில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான காமராஜர் அவர்களின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரின் இல்லம், நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. அவரின் இல்லம் முழுவதிலும் அவரின் அரிய புகைப்படங்கள் மற்றும் அவரின் ஆடை, கடிகாரம் உட்பட்ட சில உடமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் படித்த புத்தகங்களும் உள்ளன. அதில் பாதிக்கு மேல் ஆங்கில புத்தகங்களே.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களின் ரிசல்ட் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வினை 21, 277 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் 20, 562 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.64 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 6-வது இடத்தில் விருதுநகர் மாவட்டம் பிடித்துள்ளது.முதலில் விருதுநகர் 5-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது
Sorry, no posts matched your criteria.