India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்வெளியீடு இதில் முதலிபட்டியை சேர்ந்த விஜயகுமார்(28), மத்திய சேனையை சேர்ந்த ரமேஷ் (31), வி.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன்(47), ஆனையூர் காந்தி நகரைச் சேர்ந்த முத்து(52), ஆவுடையம்மாள்(25), லட்சுமி (47)
உட்பட 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிகை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிகை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் முன்னதாக 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிகை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் அருகே பட்டம்புதூர் ஆசிரியர் காலணியில் வசித்து வருபவர் மாதவன். இவர் கோவிலில் பூசாரி ஆக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பூஜைகள் முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.வச்ச காரப்பட்டி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்து வரும் நிலையில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் கடந்த 1997-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு சிவகாசி- எரிச்சநத்தம் ரோட்டில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை சார்பில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
விருதுநகரில் பொருத்தவரையில் மொத்தம் 14 வாகன புகை பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து வகை புகை பரிசோதனை நிலையங்கள் கடந்த மே 6 ஆம் தேதி முதல் புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 VERSION) பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார். அவ்வாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத புகை பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எலுமிச்சை விற்பனைக்காக நாள்தோறும் கொண்டுவரப்படுகிறது. தற்பொழுது வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் எலுமிச்சை வரத்தும் போதிய அளவில் இல்லை. இதன் காரணமாக சந்தையில் எலுமிச்சம் பழம் விலை உயர்ந்துள்ளது. மே முதல் வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை 240 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.