India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் – விமலாதேவி தம்பதியரின் மகள் சாருபிரீத்தி. இவர் காரியாபட்டி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான்காவது இடமும், விருதுநகர் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.79% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.53 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.9 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 8 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் இன்று தலா ரூ.5 லட்சம் நிதி உதவி ஆலை சார்பில் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 95.14% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.18% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.99% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் போர்மென் சுரேஷ் பாண்டியன், குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்தனர்.
சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பகுதியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விபத்து ஏற்பட்ட ஆலையில் ஆய்வு நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு விபத்து நடக்கும் ஆலைகளுக்கு உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் போர்மென் சுரேஷ் பாண்டியன் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிகை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே12 ஆம் தேதி விருதுநகரில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.