India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் கோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 3500 க்கும் அதிகமான பணியிடங்கள் ஒழிக்கப்படும், சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 16 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.மேலும் இந்த கூட்டத்தில் காவல் உயர் அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் சற்று முன் குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் அவரது குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள எம்.பி.மாணிக்கம் தாகூர் பிரேமலதா பொய் குற்றச்சாட்டை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் பொய், புரட்டை முன்வைத்து பரப்புரை செய்த பிரேமலதா இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் நகரை சேர்ந்த ஜெய்சந்திரன் மனைவி ஞானபிரகாசி 48, மகள் சர்மிளா 24 இருவரும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவதூறாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியது தெரியவந்தது. தற்கொலைக்கு முன் ஷர்மிளா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கந்துவட்டி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கெப்பிலிங்கம்பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ரயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருதுநகருக்கு தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது பெய்த மழையினால் பாலத்தின் கீழ் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக் குறிவைத்து சொந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களம் கண்ட விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் தோல்வியைத் தழுவினர். மாணிக்கம் தாகூர் இதே தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக www.cara.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 21ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.