India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 71,384 பேர் எழுத 291 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 291 முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 53 நடமாடும் குழுக்கள், துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படைகள், 291 தேர்வு மையங்களுக்கு வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகின்ற 21ம் தேதி மாலை 3 மணி அளவில் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகின்ற 15-ம் தேதி ஆகும். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா இன்று தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்த தீபலட்சுமி, லட்சுமி உள்ளிட்ட 3 பெண் பட்டாசு தொழிலாளிகள் அதே பகுதியில் வசிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஈஸ்வர பாண்டியிடம் வட்டி கடன் பெற்றனர். பணம் செலுத்த தாமதமானதால் அவர்களது வீட்டிற்கு சென்ற ஈஸ்வர பாண்டியன் கடன் பெற்ற பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரில் கந்துவட்டி கொடுமை செய்ததாக நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகாசி அருகே மீனம்பட்டியில் பட்டாசு தொழில் முடங்கி வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் கடன்காரர்கள் மற்றும் குழுதாரர்கள் யாரும் வரும் ஜூலை 5ம் தேதி வரை கடன் வசூலிக்க வேண்டாம் என ஊர் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே கிராமத்தில் 2 நாட்களுக்கு முன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் இவ்வாறு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் அருகில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு கருப்பசாமியை தலை, கைகளில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் பெய்த மிதமான மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகாசி பகுதியில் உள்ள பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் அச்சகங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. சிவகாசி அணில் குமார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாளர் பட்டாசு உற்பத்தி தொழில் கடந்த சில நாட்களாக கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதிகாரிகளின் தொடர் ஆய்வுகளில் விதிமீறிய ஆலைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவது, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி சரிபாதியாக குறைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் வரும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 15,764 ஓட்டு வித்தியாசத்தில் தேமுதிகவை வென்றார். இதேபோல் 2019 ஆம் ஆண்டு 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரை வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை வென்றார். இதன் மூலம் 2009,2019,2024 என மூன்று முறை காங்கிரஸிடம் தேமுதிக தோற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.