India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர்மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் விருதுநகரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று காலை முதலே மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் 3 சென்டி மீட்டரும், ராஜபாளையம் பகுதியில் 2 சென்டி மீட்டரும் மழை பொழிவு பதிவாகியிருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
t
காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (80). இன்று மதியம் 2.00 மணியளவில் முத்தம்மாள் வீட்டில் தனியாக டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் முத்தம்மாளின் கை, கால்களை பிடித்து கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு செயினை பறித்து பேருந்தில் ஏறி தப்பித்துச் சென்றுவிட்டார்.இது குறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலரின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 2 புகார் மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு எஸ்பி வலியுறுத்தினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் 3,27,830 குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர் எனவும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 2954 நபர்களுக்கு ரூபாய் 1.89 கோடி மருத்துவ செலவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சிகளுக்கும் முதற்கட்டமாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 842 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு 59 வீடுகள், காரியாபட்டி ஒன்றியத்திற்கு 31 வீடுகள், நரிக்குடி ஒன்றியத்திற்கு 92 வீடுகள், ராஜபாளையம் ஒன்றியத்திற்கு 261 வீடுகள், சிவகாசி ஒன்றியத்திற்கு 100 வீடுகள் என மொத்தம் 842 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 5 செ.மீட்டரும், ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 4 செ.மீட்டரும், சாத்தூர், திருச்சுழி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் சிவகாசி , அருப்புக்கோட்டை, காரியபட்டி ஆகிய பகுதிகளில் 1செ.மீட்டரும் மழை அளவு பதிவானது.
Sorry, no posts matched your criteria.