Virudunagar

News June 11, 2024

விருதுநகர் மாணவர்களுடன் உணவு அருந்திய ஆட்சியர்

image

விருதுநகர், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

News June 11, 2024

பட்டாசு ஆலை பணிகள் மீண்டும் துவக்கம்

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரங்களில் உள்ள சிறிய ரக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், தொழிலாளர் நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி நலன்களை கருத்தில் கொண்டு இன்று முதல் (11.06.24) அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பணியினை துவக்க டாப்மா சங்க உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

News June 11, 2024

விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் 18ம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பயன்பட வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 10, 2024

விருதுநகர் போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள் இன்று திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் புதிய பேருந்து அட்டை வழங்கும் வரை அவர்கள் கடந்த ஆண்டு பயன்படுத்திய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என விருதுநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News June 9, 2024

முன் விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்

image

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (50). இவருக்கும் இவரது உறவினர் சீனிவாசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வெங்கடேஷ் ஆணுறுப்பை சீனிவாசன் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீனிவாசனை தாலுகா போலீசார் கைது செய்தனர். 

News June 9, 2024

விருதுநகர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மதுரை தங்கம் நகரை சேர்ந்தவர் பிரசன்னா(42). நகை கடையில் வேலை செய்து வரும் பிரசன்னா தனது மனைவியுடன் காரில் பெருநாழி சென்று விட்டு மீண்டும் இன்று ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி அருகே குல்லம்பட்டி பகுதியில் கார்  திடீரென  நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற பிரசன்னா சம்பவ இடத்திலேயே பலியானார். ம.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். 

News June 9, 2024

விருதுநகர் அருகே நடந்தேறிய விபரீதம்

image

திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அழகன் (50). கூலி வேலை செய்து வந்த அழகன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகன் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். ம.ரெட்டியபட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News June 8, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 8, 2024

விருதுநகர்: இருசக்கர வாகனம் திருட்டு

image

விருதுநகர் வேலுச்சாமி நகர் கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் அங்குசாமி(38). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News June 8, 2024

மாவட்ட வளநபர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்க பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட வள நபர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 20 ஆம் தேதிக்குள் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!