India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பகுதியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விபத்து ஏற்பட்ட ஆலையில் ஆய்வு நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு விபத்து நடக்கும் ஆலைகளுக்கு உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் போர்மென் சுரேஷ் பாண்டியன் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிகை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே12 ஆம் தேதி விருதுநகரில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்வெளியீடு இதில் முதலிபட்டியை சேர்ந்த விஜயகுமார்(28), மத்திய சேனையை சேர்ந்த ரமேஷ் (31), வி.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன்(47), ஆனையூர் காந்தி நகரைச் சேர்ந்த முத்து(52), ஆவுடையம்மாள்(25), லட்சுமி (47)
உட்பட 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிகை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிகை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் முன்னதாக 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிகை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் அருகே பட்டம்புதூர் ஆசிரியர் காலணியில் வசித்து வருபவர் மாதவன். இவர் கோவிலில் பூசாரி ஆக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பூஜைகள் முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.வச்ச காரப்பட்டி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.