India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெம்பக்கோட்டை தாலுகா உட்பட்ட ஏழாயிரம்பண்ணை சுற்று வட்டார கிராமப்புறங்களில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது.சரியாக 3 மணி அளவில் வானம் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம் என தாலுகா தரப்பில் எச்சரிக்கை விடுத்தனர்
விருதுநகர் தனியார் மண்டபத்தில் மாவட்ட மருந்து வணிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் பாலமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி மருத்துவர் முரளிதரன் கலந்து கொண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மருந்து வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன.
விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்வோர், பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறியுறுத்தப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே முத்துராஜபுரம் பகுதியில் நேற்று பட்டாசு விதிமீறல் தொடர்பான சிறப்பு ஆய்வு குழு ஆய்வு நடத்தியது. அப்போது சேர்மராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நடத்திய சோதனையில் வீட்டில் வைத்து அவர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து சேர்மராஜை கைது செய்த போலீசார் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை(19. 05. 24) மற்றும் நாளை மறுநாள்(20. 04. 24) ஆகிய 2 நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, விருதுநகரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இப்போது அதே பகுதியில் சேர்ந்த அற்புதராஜ். கார்த்திக். இசக்கி ராஜா. சுதாகர். ஆகியோர் நான்கு பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தெற்கு காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் விருதுநகரில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விபரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.