India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் நேற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் செயல்படும் சி. இ. ஓ. ஏ. பள்ளி மாணவி கேசவப்ரியா 498 மார்க் எடுத்து மாநில அளவில் 2வது இடத்தையும், விருதுநகர் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை
பள்ளி நிர்வாகி, முதல்வர், ஆசியர்கள் பாராட்டினர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் உள்வாடகை மற்றும் உள்குத்தகை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்கரிக்கை விடுத்துள்ளார். மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே கீழ திருத்தங்கல்லில் நேற்று சரவணன் என்பதற்கு சுத்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து தொடர்பாக ஆலை குத்தகைதாரர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகிய இருவரை இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் சரவணனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் – விமலாதேவி தம்பதியரின் மகள் சாருபிரீத்தி. இவர் காரியாபட்டி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான்காவது இடமும், விருதுநகர் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.79% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.53 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.9 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 8 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் இன்று தலா ரூ.5 லட்சம் நிதி உதவி ஆலை சார்பில் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 95.14% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.18% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.99% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் போர்மென் சுரேஷ் பாண்டியன், குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.