Virudunagar

News May 13, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 பேர் மீது வழக்கு

image

விருதுநகர், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் நேற்று காலை மகேஸ்வரி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் தரைமட்டமான நிலையில் வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் ராஜாராம், ஃபோர்மேன்கள் கருப்பசாமி, ஜெயராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முந்தைய தினம் கலவை செய்த மருந்தை இருப்பு வைத்த நிலையில் ரசாயன மூலப்பொருளில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. 

News May 12, 2024

நாளை முதல் அதிரடி நடவடிக்கை

image

விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெடி விபத்துக்களை தடுக்கும் வகையில் விதிமீறல்களை கண்டறிய மாவட்ட ஆட்சியர் 4 சிறப்பு குழுக்களை நியமித்து அக்குழுவினர் நாளை முதல் தீவிர ஆய்வில் ஈடுபட உள்ளனர். விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனே ஆலை நிர்வாகம் மீது இக்குழு நடவடிக்கை எடுக்கும்.

News May 12, 2024

குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விருதுநகர் இருப்பு பாதை காவல் நிலைய காவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர் காந்தி சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் நடைமேடையில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரயில்வே காவல்துறையினர் வழங்கினர்.

News May 12, 2024

விருதுநகர் அருகே வெட்டி படுகொலை 

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார் புரத்தில் ஞானசேகர் என்பவர் வெட்டிக் படுகொலை. ஞானசேகர் என்பவரின் உடலை மீட்டு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் புறா வளர்த்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்த மணிகண்டன், நாகராஜ், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News May 12, 2024

விருதுநகர் அருகே விபத்து; மரணம்

image

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (45). இவர் அந்த பகுதியில் மைக்செட் போடும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி இரவு சிவகாசி – சாத்தூர் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதி பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 11, 2024

விருதுநகரில் நாளை மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

விருதுநகர் அவார்ட் சிட்டி தீம் பார்க் அம்சங்கள்

image

அவார்ட் சிட்டி தீம் பார்க், விருதுநகர் வடமலைகுறிச்சி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லும் இந்த தீம் பார்க்கில் குளித்து விளையாடும் வகையில் நீர் சறுக்கு விளையாட்டுகள், செயற்கை அருவி, பாத்டப், ரெயின் டிஸ்கோ போன்ற தண்ணீர் விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது சிறிய தீம் பார்க்காக இருந்தாலும், உள்ளூரிலேயே இருப்பதால் அனைவரின் விருப்பமான ஒன்றாகும்.

News May 11, 2024

விருதுநகர்: 13 குழந்தை திருமணங்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 13 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

விருதுநகர்: 82 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பை முடிக்காத போர் மேன்கள் கண்காணிப்பாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது தெரிந்தால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!