India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அத்தகவலின் பேரில் திருச்சுழி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 172 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அதில்11 பேரை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே காரிசேரி பகுதியில் செயல்பட்ட தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் மாரியப்பன், அருள்தாஸ், பிரபாகரன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஆலை உரிமையாளர்களான ராமர்(60), முத்துராமன்(58) ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
விருதுநகர் மாவட்டம் பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் சார்பாக இன்று (ஆக.30) விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் நாட்டு விதை கண்காட்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் காரியாபட்டி, பாம்பாட்டி மரபு விதை சேமிப்பு மைய நிறுவனர் சரவணகுமார், பூமி இயற்கை விவசாய மைய நிர்வாகி பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விவசாயிகள் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்தில் 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களில் 1094 கிலோ 851 கிராம் எடையுடைய புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.60 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 234 நகரங்களில் ரூ.784.87 கோடி மதிப்பில் உள்ளூர் பேச்சு மொழி, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனியார் ரேடியோ அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ராஜபாளையம் உட்பட தமிழ்நாட்டில் 11 நகரங்களில் FM ரேடியோ அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்காக ஆக.31 முதல் செப்.3 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
விருதுநகர் ஆலடிப்பட்டியில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 6 பஞ்சலோக சிலைகளை விற்க முயன்றதாக சிலை கடத்தல் பிரிவு டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 2017ல் ஐஜி பொன்மாணிக்கவேல் கைது செய்தார்.சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு உதவ தன்னை பழிகடாவாக்கியதாக பொன் மாணிக்கவேல் மீது சென்னை ஐகோர்ட்டில் காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில் சிபிஐ அவர் மீது வழக்கு பதிந்தனர். முன்ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை வேகமெடுத்து வருகிறது. இந்த ஆண்டு கட்டப்பட்டுள்ள 200 புதிய பட்டாசு கடைகளுக்கான அனுமதி கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக வருவாய்த் துறையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாய்த் துறையினர் புதிய பட்டாசு கடைகளுக்கான அனுமதி வழங்காமல் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளதால் 200 பட்டாசு கடைகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3 ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, ஆரஞ்சு ஆகிய நிறங்களிலான கண்ணாடி மணிகள் கிடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கண்ணாடி மணிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இங்கு சங்கு வளையல் கூடம் இருந்ததற்கான சான்று கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி அருகே குமிழங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் சௌந்தரராஜ். இவர் கடந்த 16 ம் தேதி எரிச்சநத்தம்-அழகாபுரி சாலையில் உள்ள தனது மினரல் வாட்டர் கம்பெனியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை செய்த நபர்கள் இவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இச்சம்பவம் நடந்து 2 வாரங்களாகியும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.