India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டாட்சியராக பணியாற்றி வந்த முத்து பாண்டீஸ்வரியை, சாத்தூர் சிப்காட் அலகு 2 தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சிப்காட் அலகு 2ல் பணியாற்றும் கலைவாணி, வெம்பக்கோட்டை வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
2024 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருப்பரங்குன்றம் திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் 2 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வெம்பக்கோட்டை தாசில்தார் முத்து பாண்டீஸ்வரி சாத்தூர் சிப்காட் அழகு 2 தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் கலைவாணி வெம்பக்கோட்டை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக 15 அரசு நகர் பேருந்துகள் பணிமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதுவரை 9 அரசு பேருந்துகள் வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 புதிய பேருந்துகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பணிகள் முடிவடைந்ததும் விரைவில் தேவைக்கேற்ப பணிமனைகளுக்கு வழங்கப்பட்டு இயக்கப்படும் என விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்
விருதுநகர், சிவகங்கை அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 269 சரவெடி பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதி பெற்ற வெடிபொருள் குடோனில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருந்த குடோனுக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமூக நலத்துறை மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியின் போது மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 30 கலை அறிவியல் கல்லூரிகள் 7 மருத்துவப் பிரிவு கல்லூரிகள் 12 பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 70 கல்லூரிகளில் பயிலும் 5781 மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வீதம் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் நாகராஜ்(43). கூலி வேலை செய்து வந்த நாகராஜ் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நாகராஜ் போடுரெட்டிபட்டி கண்மாயில் மது போதையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 12-லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கட்டிடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.