India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.46% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.60 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.68 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் 92.48% பேரும், மாணவியர் 97.32% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 95.06% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்தவர் ராஜம்மாள்(56). கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் குழந்தை இல்லாததால் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்தவர் ராஜம்மாள்(56). கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் குழந்தை இல்லாததால் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி ஏதேனும் செயல்படுவதாக தெரியவரும் பட்சத்தில் அதுகுறித்த தகவல்களை காவல்துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள 94439 67578 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே தச்சகுடியிலிருந்து தாழைப்பட்டி செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடந்தாண்டு அமைக்கப்பட்ட தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள் பள்ளத்தை சரி செய்யாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.