India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டினை ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் நர்சரி பிரைமரி பள்ளிகள் 86, மெட்ரிக் பள்ளிகள் 84 உள்ளன. இப்பள்ளிகளில் 1747 இடங்களுக்கு தற்பொழுது 2727 விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 561 சுகப்பிரசவங்கள், 16 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 615 சுகப்பிரசவங்கள், 22 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஒப்பிடுகையில் கடந்த 4 மாதங்களில் 54 சுகப்பிரசவங்கள், 6 இரட்டை குழந்தைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் நகராட்சி சாலையில் வசித்து வருபவர் மூதாட்டி நளினா(62). மூதாட்டி தற்பொழுது யாரும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மூதாட்டிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவரை அக்கம்பக்கத்தினர் மீது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.24) மதியம் 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சாத்தூர் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டூர் வட்டம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. நேற்று தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்று டோல் பூத் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டோல் பூத்தில் இருந்த ரூபாய் 2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய விழுப்புரம் பகுதியைச் சார்ந்த ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் மீது காவல்துறையினர் வழக்கு .
சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் 2023 ஜனவரி முதல் 2024 ஏப்ரல் வரை 72 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் இருந்த 18 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து பட்டாசு விதிமீறல் ஆய்வு குழுக்கள் ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழக பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 150 பட்டாசு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் லிங்கம் மற்றும் அவருடைய மனைவி ஆசிரியை பழனியம்மாள், மகன், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 2 வயது பேத்தியை கொன்றதும் தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால் தற்கொலை என முதற்கட்ட தகவல்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 படுக்கை, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 6 படுக்கை, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 4 படுக்கைகளுடன் மது போதை சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. இதில் 95 நோயாளிகள் அரசு மனநல மருத்துவர்களின் சிகிச்சையால் குணமடைந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று(மே 22) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.