India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை(19. 05. 24) மற்றும் நாளை மறுநாள்(20. 04. 24) ஆகிய 2 நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, விருதுநகரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இப்போது அதே பகுதியில் சேர்ந்த அற்புதராஜ். கார்த்திக். இசக்கி ராஜா. சுதாகர். ஆகியோர் நான்கு பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தெற்கு காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் விருதுநகரில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விபரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விருதுநகர்மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் விருதுநகரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று காலை முதலே மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் 3 சென்டி மீட்டரும், ராஜபாளையம் பகுதியில் 2 சென்டி மீட்டரும் மழை பொழிவு பதிவாகியிருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
t
Sorry, no posts matched your criteria.