India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நலிந்த நிலையில் உள்ள தமிழத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நேற்று(செப்.4) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 360 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். 4 வயது முதல் 18 வயது வரையிலான பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய 250 மாணவ மாணவியர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை கடந்த 10 ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் ஆலை முறையாக செயல்படாமல் மூடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சிமெண்ட் ஆலையை நவீன முறையில் புனரமைத்து மீண்டும் லாபகரமான முறையில் ஆலை செயல்பட தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசியில் நேற்று சார் ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரனிடம் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மாநகரில் அடிப்படை வசதிகள், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு, உடனடியாக நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கு வழங்க வேண்டும், பாம்பு கடிக்கு ஊசி மருந்துகள் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 27 ஆம் தேதி புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் ரொம்ப கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறையில் தெரிவித்துள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள அரியவகை பொருட்களான தங்க ஆபரணம், செப்பு காசுகள், சூது பவள மணிகள் என சுமார் 9600 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
அருப்புக்கோட்டையில் டிஎஸ்பி காயத்ரி நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பணியில் ஈடுபடும் போலீசார் கையில் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும். கையில் லத்தி இல்லாத காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். தலைக்கவசம் அணியாமல் காவலர்கள் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என வாக்கி டாக்கி வாயிலாக எஸ்பி கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் 2021 அன்று மாரியம்மாள் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு செப்.30 க்குள் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு வழங்கவில்லை என்றால் தொடர்புடைய உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனக் கூறி வழக்கை செப்.30க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு மாணவர் இன்று காலை விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) என்பது தெரியவந்தது. போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்விலை மற்றும் தொடக்க கல்வியை சேர்ந்த 9 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்க உள்ளது. ராஜசேகர், தண்டீஸ்வரர், ராஜ்குமார், பெருமாள், ஜெயா கிறிஸ்டிபாய், ஜோதிலட்சுமி, பால் ஆந்தோனி அமல் ராஜ், முருகன், டேனியல், சுப்புலட்சுமி ஆகியோர்க்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நேற்று முன்தினம் பெருமாள்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிக்குமார் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 4 பேரை கைது செய்த நிலையில் காளீஸ்வரனை விசாரணைக்காகவும், ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததில் அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து கை உடைந்து முறிவு ஏற்பட்டதாக தகவல்.
Sorry, no posts matched your criteria.