Virudunagar

News May 29, 2024

திருசுழியில் இளைஞர் வெட்டிக்கொலை!

image

விருதுநகர், திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை பார்க்கச் சென்ற கருப்பையாவை மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 29, 2024

விருதுநகர்: சிறுவனை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

image

விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் மூர்த்தி. இவரது 17 வயது மகன் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த சிவா, k.முனீஸ்வரன், b.முனீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் மது போதையில் சிறுவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு மது பாட்டிலால் சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 29, 2024

விருதுநகர் ஐய்யனாய் அருவி சிறப்புகள்!

image

விருதுநகரில் உள்ள அய்யனார் அருவி இராஜபாளையம் நகரிலிருந்து 10 கிமீ மேற்கே அமைந்துள்ளது. இந்த அருவி வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர் பெருக்கு அதிகரிக்கும். இந்த அருவி நீரானது இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்கிறது. மலையடிவாரத்தில் பழையாறு, நீராறு ஆகிய ஆறுகள் சேருமிடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீர்காத்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது.

News May 29, 2024

விருதுநகர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒருவர் பலி

image

ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூா் சோ்ந்த விக்னேஸ்வரன்.இவா் குலசேகரப்பேரி கண்மாய் அருகே தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாா்.வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் இவரது உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தனா்.ஆடைகள் கிணற்றின் அருகே கிடந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விக்னேஸ்வரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தளவாய்புரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News May 28, 2024

விருதுநகர்:16 பெட்டிக்கடைகளுக்கு ரூபாய் 4 லட்சம் அபராதம்

image

மாவட்டத்தில் தடை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை போலீசார் இணைந்து மே 19 முதல் மே 25 வரை பெட்டிக்கடைகள் வாகனங்களில் சோதனை செய்தனர். இதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக பெட்டிக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூபாய் 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News May 28, 2024

விருதுநகர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்திலிருந்து பல்வேறு வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு சட்ட விரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.எனவே சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார்.

News May 27, 2024

விருதுநகரில் ரூ.4 லட்சம் அபராதம்!

image

விருதுநகரில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் 16 பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

விருதுநகர்: சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் குறிப்பு!

image

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 480 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது வனவிலங்கு சரணாலயம். இது அதிக அளவில் சாம்பல் நிற அணிகள் வாழ்ந்து வருகின்றன. அதனால் இந்த சரணாலயம் சாம்பல் நிற அல்லது நரைத்த அணில்கள் சரணாலயம் என்றும் அழைக்கப்பட்டு வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. இந்த பகுதியில் அணில்கள் மட்டுமின்றி யானை, புலி,வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, தேவாங்கு போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.

News May 27, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணி (65).கூலி வேலை செய்து வந்த மணி ஹோட்டலில் சாப்பிடுவதற்காக திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது ஜீவா லாட்ஜ் எதிரே அவ்வழியாக வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் நேற்று  விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 27, 2024

விருதுநகரில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் பத்து மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை விருதுநகர் எம் எல் ஏ சீனிவாசன் துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!