India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாத்தூர் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டூர் வட்டம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. நேற்று தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்று டோல் பூத் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டோல் பூத்தில் இருந்த ரூபாய் 2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய விழுப்புரம் பகுதியைச் சார்ந்த ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் மீது காவல்துறையினர் வழக்கு .
சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் 2023 ஜனவரி முதல் 2024 ஏப்ரல் வரை 72 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் இருந்த 18 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து பட்டாசு விதிமீறல் ஆய்வு குழுக்கள் ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழக பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 150 பட்டாசு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் லிங்கம் மற்றும் அவருடைய மனைவி ஆசிரியை பழனியம்மாள், மகன், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 2 வயது பேத்தியை கொன்றதும் தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால் தற்கொலை என முதற்கட்ட தகவல்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 படுக்கை, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 6 படுக்கை, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 4 படுக்கைகளுடன் மது போதை சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. இதில் 95 நோயாளிகள் அரசு மனநல மருத்துவர்களின் சிகிச்சையால் குணமடைந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று(மே 22) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டாட்சியராக பணியாற்றி வந்த முத்து பாண்டீஸ்வரியை, சாத்தூர் சிப்காட் அலகு 2 தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சிப்காட் அலகு 2ல் பணியாற்றும் கலைவாணி, வெம்பக்கோட்டை வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
2024 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருப்பரங்குன்றம் திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் 2 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வெம்பக்கோட்டை தாசில்தார் முத்து பாண்டீஸ்வரி சாத்தூர் சிப்காட் அழகு 2 தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் கலைவாணி வெம்பக்கோட்டை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக 15 அரசு நகர் பேருந்துகள் பணிமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதுவரை 9 அரசு பேருந்துகள் வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 புதிய பேருந்துகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பணிகள் முடிவடைந்ததும் விரைவில் தேவைக்கேற்ப பணிமனைகளுக்கு வழங்கப்பட்டு இயக்கப்படும் என விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.