Virudunagar

News June 29, 2024

பட்டாசு ஆலை விபத்து – ஆளுநர் இரங்கல்

image

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் என்றும், பட்டாசு ஆலை விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – நிவாரணம்

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், இறுதிச் சடங்கிற்காக 52,000 ரொக்கமும் ஆலை தரப்பில் வழங்கப்பட்டது.

News June 29, 2024

பட்டாசு வெடி விபத்து – இருவர் கைது

image

சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீதமிருந்த வெடிபொருட்களில் உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் சகாதேவன், அவரது மகன் பாண்டியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News June 29, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

image

விருதுநகர், சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 29, 2024

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – ஆட்சியர் ஆய்வு

image

சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவத்திற்கு மீதமிருந்த வெடிபொருட்களில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 80 ஆலைகளில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News June 29, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

image

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான குருஸ்டார் என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த 3 ஆண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

News June 29, 2024

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

image

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலையில் 3 அறைகள் சேதமடைந்துள்ளது. விபத்தில் மேலும் சிக்கியுள்ள சிலரை, தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News June 29, 2024

அரசு சிமெண்ட் ஆலைக்கு ரூ.25 கோடி நிதி

image

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையில் ரூ.25 கோடி செலவில் எம்.சாண்ட் உற்பத்தி தொடங்கப்படும் என நேற்று நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிமெண்ட் ஆலையை புனரமைக்க வலியுறுத்தி ஆலை கமிட்டினர் போராடிவரும் நிலையில், இந்த அறிவிப்பு சற்று ஆறுதலை தந்தாலும் ஆலையை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

News June 28, 2024

அரசு சிமெண்ட் ஆலைக்கு ரூ.25 கோடி நிதி

image

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையில் ரூ.25 கோடி செலவில் எம்.சாண்ட் உற்பத்தி தொடங்கப்படும் என இன்று நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிமெண்ட் ஆலையை புனரமைக்க வலியுறுத்தி ஆலை கமிட்டினர் போராடிவரும் நிலையில், இந்த அறிவிப்பு சற்று ஆறுதலை தந்தாலும் ஆலையை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

News June 28, 2024

மாற்றுத் திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்

image

விருதுநகர் அருகே மீசலூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மாரியப்பன் என்பவரின் வீடு சேதமடைந்திருப்பதால் வீட்டினை சீரமைக்க உதவிடுமாறு ஆட்சியரிடம் மனு அளித்ததன் பேரில், மனுவின் உண்மைத்தன்மை குறித்து பரிசீலனை செய்து, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று(ஜூன் 28) திறந்து வைத்தார்.

error: Content is protected !!