India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே ஆமத்தூரிலிருந்து லட்சுமியாபுரம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மழை காலங்களில் அடிக்கடி மூழ்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மேம்பாலம் அமைக்க மக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தற்போது ரூ.2.48 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளையாட்டு துறையில் சர்வதேச தேசிய போட்டிகளில் வென்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழக முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6000 வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www. sdat.tn.gov.in என்ற தளத்தில் செப். 30 மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சிவகாசி பெரியகுளம் கண்மாயில் கடந்த மார்ச் மாதம் முதல் வார இறுதி நாட்களில் படகு சவாரி போக்குவரத்து திட்டம் துவங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஏற்பாட்டில் துவங்கப்பட்ட இத்திட்டம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் தேர்தல் முடிவடைந்து 3 மாதங்களாகியும் இதுவரை படகு சவாரி திட்டம் துவங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் சத்திரம் அண்ணா அ தி .மு .க கிளை கழக செயலாளராக பணியாற்றியவர் திரிசங்கு (வயது – 40.) இவர், சிறிது காலம் உடல் நலமில்லாமல் இருந்தார். இன்று காலை அவர் உடல் நிலையை மிகவும் மோசமானதால் சிகிக்சை பலனின்றி இறந்து போனார். அன்னாரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
அருப்புக்கோட்டை டி.எஸ்.பி ஆக பணிபுரிந்து வந்த காயத்ரி கடந்த சில நாட்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதிவாணன்(IPS) புதிய ஏ.எஸ்.பி ஆக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் ஐ.பி.எஸ் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 600 ஹெக்டேருக்கும் அதிகம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது பருத்தி சாகுபடி செய்வதில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் கூலி அதிகரிப்பு, இடுபொருட்கள் விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. ஆனால் பருத்தியின் விலை குறைந்துள்ளது. இதனால் நடப்பாண்டில் பருத்தி சாகுபடி செய்வது சரிபாதியாக குறைந்து வருகிறது.
விருதுநகர் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. செப்., 20க்குள் புகார் மனுக்கள் வந்து சேர வேண்டும். தபால் சம்மந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகிய விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., ஆகிய போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரி, சேப்பாக்கம் மாநில கல்லூரியில் நடைபெற உள்ளது.எனவே பயிற்சியில் சேர ஆர்வம் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தோர் www.cecc.in என்ற இணையதளம் வாயிலாக நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்வு பெற்ற மற்றும் தேர்வு பெறாத மாணவர்களை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியியல் சேர்ப்பதற்கான மற்றும் கல்விக் கடன் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 10 தேதி நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு தாலுகா, கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.தங்கபாண்டியன். இவர் இந்திய இராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில, கடந்த வாரம் பணியின்போது ஏற்ப்பட்ட விபத்தில் வீரமரணமடைந்தார். அவரது பூத உடலுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேற்று இரவு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
Sorry, no posts matched your criteria.