India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 28 புகார் மனுக்களும் காவலர்களிடம் இருந்து 40 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளை உத்தரவிட்டார்.
ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மட்டும் பேச்சு போட்டிகள் வரும் 9ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலக கட்டிடத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 2) தகவல் தெரிவித்துள்ளது.
விருதுநகரில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 16ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று அறிவித்துள்ளார். சென்னை ஓய்வூதிய இயக்குநா் தலைமையில், அரசுத்துறையில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதால் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்து கொள்ள விரும்பும் ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார். பின் 2021 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் யில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது அரசியலில் பேசு பொருளாக மாறிய நிலையில், வரும் 2026 தேர்தலில் மீண்டும் சிவகாசியில் போட்டியிட தயாராகி அதற்கான பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.
விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி மற்றும் சர்க்கரை விலை குறைந்தது. சர்க்கரை 100 கிலோவிற்கு ரூ.80 விலை குறைந்து ரூ.4,180 ஆகவும், பட்டாணி 100 கிலோவிற்கு ரூ.1,500 குறைந்து ரூ.4,500 ஆகவும் விற்பனையானது. கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 விலை குறைந்து ரூ.2,750 ஆக விற்பனையானது
விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 6 காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் இன்று காலை 11 மணி முதல் சங்க அலுவலகத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9486553544, 6374050289 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் சிறப்பு குழுக்கள் மூலம் 98 பட்டாசு ஆலைகள் விதிமுறைகள் மீறியது கண்டறியப்பட்டு, அதன் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆலை உரிமம், பணியாளர்கள் அடங்கிய பெயர் பலகை வைக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 29) காலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தநிலையில், ஆலை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பணிக்கு சேர்ந்த முதல் நாளே 2 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விருதுநகரில் 150 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் மோகன், செல்வகுமார் வேலை இழந்துள்ளனர். இதனால் வாங்கிய கடனை அடைக்க புதிய ஆலையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். இருவருக்கும் பணியில் போதிய அனுபவம் இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.