India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 15 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19696 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 19205 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 7531 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3376 வாக்குகளும் பெற்றுள்ளனர். 15 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2814 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 14 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17897 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 15818 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 10589 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 4149 வாக்குகளும் பெற்றுள்ளனர். 14 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2323 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தேர்தலின்போது, தனது கட்சியை கலைத்த நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்ததோடு ஒரு சீட்டையும் பெற்றார். அதன்படி, கிடைத்த விருதுநகர் தொகுதியில் தனது மனைவி ராதிகாவை களமிறக்கினார். அவரை எம்பியாக்கும் கனவோடு தீவிரமாக களமாடினார் சரத்குமார். ஆனால், வாழ்வில் நாம் நினைக்கும் அனைத்தும் உடனே கிடைத்துவிடுவதில்லை. அதற்கு சரத்குமாரும் விதிவிலக்கல்ல! ‘விருதுநகரில் win’ என்ற இலக்கு தற்போது கலையாத கனவானது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி வெள்ளைச்சாமியை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணும் மையத்தை இந்திய கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் மாலை பார்வையிட வந்தார். காங்கிரஸ் திமுக கட்சி வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களை சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்தார். வெற்றி வாய்ப்பை பற்றியும் கேட்டறிந்தார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 13வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17850 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18606 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 9814 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3826 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 13 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 244 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் எம்பி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி முகத்தில் உள்ளார். 2வது இடத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், 3வது இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமாரும் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராதிகா, விஜய பிரபாகரன் எனக்கு மகன் போன்றவர் என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 12 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18847 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18210 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 8578 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3544 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 12வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1200 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விருதுநகரில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இழுபறி அடைந்து, வெற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தேமுதிக நிர்வாகிகள் விஜய பிரபாகரன் வெற்றி அடைந்ததாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். ஆனால் அவர் தற்போது 3, 843 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 10வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18,350 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 20,571 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 10022 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3535 வாக்குகளும் பெற்றுள்ளனர். 10வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 194 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 174091 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 172064 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 67051 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக் – 33925 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2027 வாக்குகள் பெற்று முன்னிலை.
Sorry, no posts matched your criteria.