India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூா் சோ்ந்த விக்னேஸ்வரன்.இவா் குலசேகரப்பேரி கண்மாய் அருகே தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாா்.வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் இவரது உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தனா்.ஆடைகள் கிணற்றின் அருகே கிடந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விக்னேஸ்வரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தளவாய்புரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
மாவட்டத்தில் தடை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை போலீசார் இணைந்து மே 19 முதல் மே 25 வரை பெட்டிக்கடைகள் வாகனங்களில் சோதனை செய்தனர். இதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக பெட்டிக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூபாய் 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலிருந்து பல்வேறு வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு சட்ட விரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.எனவே சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார்.
விருதுநகரில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் 16 பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 480 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது வனவிலங்கு சரணாலயம். இது அதிக அளவில் சாம்பல் நிற அணிகள் வாழ்ந்து வருகின்றன. அதனால் இந்த சரணாலயம் சாம்பல் நிற அல்லது நரைத்த அணில்கள் சரணாலயம் என்றும் அழைக்கப்பட்டு வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. இந்த பகுதியில் அணில்கள் மட்டுமின்றி யானை, புலி,வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, தேவாங்கு போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணி (65).கூலி வேலை செய்து வந்த மணி ஹோட்டலில் சாப்பிடுவதற்காக திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது ஜீவா லாட்ஜ் எதிரே அவ்வழியாக வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் நேற்று விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் பத்து மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை விருதுநகர் எம் எல் ஏ சீனிவாசன் துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் விருதை பாரதிகள் மற்றும் டைனமிக் ஜிம் சார்பாக மெகா பிசினஸ் எக்ஸ்போ -2024 என்ற தலைப்பில் பெண்களுக்கான தொழில் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 32 வகையான தொழில்கள் குறித்த படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
திருச்சுழி அருகே பூவாகனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பையா(81). முதியவர் சின்ன கருப்பையாவுக்கும் அவரது மகன் பாலகுருவுக்கும் இடையே சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் சின்ன கருப்பையாவை பாலகுரு உள்ளிட்ட இருவர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நரிக்குடி போலீசார் நேற்று மே 25 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் இன்று மாலை பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இளைஞர் கருப்பசாமி தன் நண்பருடன் பைக்கில் சாகசம் செய்தபடி பேருந்தின் முன்பக்கத்தில் மோதினார். இதில் கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.