Virudunagar

News September 14, 2024

விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கும் போட்டிகள்

image

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்கள் எதிர் கொள்ளும் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006, பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 ஆகிய சட்டங்களை மையக்கருத்தாக கொண்டு விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து அனுப்புவதற்கான போட்டிகள் நடைபெற உள்ளது. அக்டோபர் 5ம் தேதிக்குள் குறும்படம் தயாரித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

News September 14, 2024

திருச்சுழியில் 11 பேர் மீது வழக்கு பதிவு

image

திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(80). இவருக்கும் இவரது மகன் கணேசனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது திருச்சுழி போலீசார் நேற்று செப்டம்பர் 13 வழக்கு பதிந்துள்ளனர்.

News September 14, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வில் அடுத்த ஆச்சரியம்

image

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 1700க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று (செப்.13) மீன் முதுகெலும்பில் செய்யப்பட்ட நட்சத்திர வடிவ ஆபரணம் மற்றும் சிறிய வடிவிலான உருளை வடிவ குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கலைநயத்துடன் வடிவமைத்திருப்பது இதன் மூலம் தெரிய வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

News September 13, 2024

சாத்தூர்: கல்லூரியில் களைகட்டிய ஓணம்

image

சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் கொண்டாட்டத்திற்காக மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடையில் கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர். மேலும் சிறப்பாக அத்தப்பூ கோலமிட்டிருந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கல்லூரி சேர்மன் ராஜூ கலந்து கொண்டார். செயலாளர் முத்துக்குமார், கல்லூரி முதல்வர் உஷாதேவி தலைமை வகித்தனர்.

News September 13, 2024

ஜிஎஸ்டி விவகாரம்; மன்னிப்பு கேட்க வைப்போம் – எம்.பி

image

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிவகாசியில் இன்று (செப்.13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொழிலதிபர் ஒருவர் ஒன்றிய நிதியமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் பதிலளித்தது குறித்து பேசிய அவர், ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டுவதற்கான ஆதாரமாகவே கருதுகிறோம் என்றும், மன்னிப்பு கேட்க வைத்து நாடாளுமன்றத்தில் குரம் எழுப்புவோம் என்றும் பேசினார்.

News September 13, 2024

கே.டி. ராஜேந்திர பாலாஜி வழக்கு – ஐகோர்ட் உத்தரவு

image

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது ரவீந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரிய இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு ஆணை பிறப்பித்து உயர்நீதிமன்றம் இன்று (செப்.13) உத்தரவு பிறப்பித்துள்ளது.

News September 13, 2024

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 20 காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

அகில இந்திய தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழில் பயிற்சி குடும்பத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News September 13, 2024

பந்தல்குடியில் லாரி மோதியதில் ஒருவர் பலி

image

அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(55). இவர் தனியார் நிறுவனத்தில் தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலுச்சாமி பந்தல்குடியிலிருந்து தனியார் சிமெண்ட் கம்பெனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியட்தில் வேலுச்சாமி உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 12, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதமும் 15 நாட்கள் கடை மூடி சீல் வைக்கப்படும். இரண்டாவது முறை தவறு செய்தால் ரூ.50,000 மற்றும் ஒரு மாதம் கடை மூடி சீல் வைக்கப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதமும் மூன்று மாத கடை மூடி சீல் வைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!