Virudunagar

News May 30, 2024

விருதுநகர் துவக்கி வைத்த ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்த டிஜிட்டல் லிட்டரசி தொடர்பான பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 30, 2024

விருதுநகர் அருகே தாக்குதல்

image

விருதுநகர்,கமுதி அருகே முத்துப்பட்டியை சேர்ந்தவர் உக்கிர பாண்டி(52).இவரது குடும்பத்தாருக்கும் திருச்சுழி அருகே அம்மன் பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று அம்மன் பட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின்போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.திருச்சுழி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News May 30, 2024

விருதுநகரில் வீட்டில் 3 பவுன் தங்க நகைகள் திருட்டு

image

விருதுநகர் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவர் மே 27ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உள் தாழ்பாள் போடப்பட்டிருந்தது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த மூன்று பவுன் செயினை அடையாளம் தெரியாத நபர் திருடி மாடி வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து மேற்கு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 30, 2024

விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

image

காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி திட்டம் சென்னை மாநகரில் 2021 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விருதுநகர் மாவட்ட போலீசார் பயன்பெறும் வகையில் தென் மண்டல ஐஜி உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நேற்று பயிற்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு.

News May 30, 2024

விருதுநகரில் 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு

image

வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சிறு பட்டாசு ஆடைகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்படுவதை கண்டித்து தமிழன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று (30.05.2024)7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட ஆலைகளில் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

News May 30, 2024

ஆறுதல் தெரிவித்த விருதுங்கர் எம்பி 

image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் தடுமாறி விழுந்ததில் தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் பரிபூரணமாய் குணம் அடைந்திடவும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவும்,மீண்டும் நாடாளுமன்றத்தில் சிம்ம குரல் ஒலிக்க இறைவனை வேண்டுவதாக நேற்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

விருதுநகரில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 13 புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தினார்.

News May 29, 2024

விருதுநகர்: விவசாயிகளே இதை கவனியுங்கள்

image

சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதையானது விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பெறலாம் என சிவகாசி வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவள்ளி இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

திருசுழியில் இளைஞர் வெட்டிக்கொலை!

image

விருதுநகர், திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை பார்க்கச் சென்ற கருப்பையாவை மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 29, 2024

விருதுநகர்: சிறுவனை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

image

விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் மூர்த்தி. இவரது 17 வயது மகன் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த சிவா, k.முனீஸ்வரன், b.முனீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் மது போதையில் சிறுவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு மது பாட்டிலால் சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!