India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் இன்று குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு 25 மையங்களில் நடைபெற்று வருகிறது. 25 தேர்வு மையங்களில் மொத்தம் 6,900 நபர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். மேலும் தேர்வு மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசி, காளையார்குறிச்சியில் முருகவேலுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஜூன்.9 அன்று உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மாரியப்பன்(45), முத்து மருகன்(45) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரோஜா(55) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 12) அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுடனான Coffee With Collector என்ற 78-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 12) தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மற்றும் TNSDEM செயலியில் பேரிடர் காலங்களில் முக்கியமான தரவுகளை பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில், பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாத்து மேய்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வீரகுரு என்பவரை அவரது அண்ணன் வீரபாண்டி என்பவர் நேற்று கத்தியால் குத்தி கொலை செய்தார். இதேபோல் காரியாபட்டி அருகே திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட இளம்பெண்ணை மத்திய சேனையை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். ஒரே நாளில் மாவட்டத்தில் இரு கொலைகள் நடத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் அடிக்கடி வெடி விபத்து ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் சுமார் 200 ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதில் பணியாற்றிய சுமார் 4000 தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் முதல் ஜூன் வரை இயக்க தகுதியற்ற 55 அரசு பஸ்கள் கண்டம் செய்யப்பட்டு, புதிதாக 36 அரசு பஸ்கள் அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாக விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மேலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், கூடுதலாக 26 அரசு பேருந்துகள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை 500க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக 3 அகழாய்வு குழிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 2 புதிய அகழாய்வு குழிகள் உருவாக்கப்பட்டு அவற்றில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதாக இணை இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.