India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசு தொகையினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் கந்து வட்டி கொடுமையால் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை எடுத்துள்ளார்.
விருதுநகர் நல்லவன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(20). இவருக்கு தலையில் அடிபட்ட நிலையில் மூளையில் உடைந்த எலும்பு ரத்தக்கட்டி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குருமூர்த்திக்கு அரசு மருத்துவர்கள் உரிய சிகிச்சை வழங்கி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்பொழுது இளைஞர் குருமூர்த்தி நலமாக உள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகரில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது வீட்டில் மே 27ஆம் தேதி மதியம் உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வீட்டில் பீரோவை உடைத்து 3 பவுன் தங்க செயினை திருடி சென்றார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சிக்கந்தர் என்பவர் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (மே.31) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேன்மொழி நகர், முத்தரையர் நகர், பாளையம்பட்டி கிழக்கு மற்றும் பஜார் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும் , ஆற்றில் கால் வைத்தாலே ஊசி போன்ற மருத்துவ கழிவுகள் காலை பதம் பார்த்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கௌசிகா மகாநதி ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் ஆறு மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்த டிஜிட்டல் லிட்டரசி தொடர்பான பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.