Virudunagar

News September 17, 2024

விருதுநகரில் கடந்த 8 மாதத்தில் ரூ.67 லட்சம் அபராதம்

image

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக 260 கடைகள் மற்றும் 29 வாகனங்களில் 1207 கிலோ 774 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 260 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 260 கடைகள் மற்றும் 29 வாகனங்களுக்கும் ரூபாய் 67 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் அளித்துள்ளது.

News September 17, 2024

விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 20ம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. எனவே வேலைநாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

விருதுநகரில் புதிய 4 வழிச்சாலை

image

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர் பகுதி மக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கு மதுரை சென்று சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மாற்றாக ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி,- விருதுநகர்,- அருப்புக்கோட்டை, நரிக்குடி,- பார்த்திபனுார் வழியாக பரமக்குடி செல்லும் ரோட்டினை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News September 17, 2024

வெளி மாநில லாட்டரி விற்பனை செய்தவர் கைது

image

இராஜபாளையம் அருகே சேத்துார் பேருந்து நிலையம் அருகே சேத்துார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து
பல மாநில லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 16, 2024

உரிமம் இல்லாமல் விற்றால் நடவடிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிரிடுபவர்கள் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். விதைகள் அந்தந்த பகுதிக்கு ஏற்றவையா என்ற விவரங்களை பார்த்து வாங்க வேண்டும். மேலும், நர்சரி உரிமையாளர்கள் உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

சதுரகிரி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு செப்.15 முதல் செப்.18 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

News September 16, 2024

சென்டர் மீடியனில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

மதுரை அருகே செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (35). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் விருதுநகர் – சிவகாசி ரோடு ஆத்துப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியதில் தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை இயக்கிய ஓட்டுனர் செந்தில் குமார் என்பவர் மீது மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 16, 2024

உரிமம் இல்லாமல் விற்றால் நடவடிக்கை – மாவட்ட நிர்வாகம்

image

விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிரிடுபவர்கள் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். விதைகள் அந்தந்த பகுதிக்கு ஏற்றவையா என்ற விவரங்களை பார்த்து வாங்க வேண்டும். மேலும், நர்சரி உரிமையாளர்கள் உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

தமிழ்நாடு நிதி அமைச்சரின் இன்றைய நிகழ்ச்சி

image

தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் இன்றைய நிகழ்ச்சி நிரல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை விருதுநகர் மாவட்டம் வரலொட்டி வடக்குவாச் செல்வி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, கட்சி நிர்வாகிகளின் திருமண விழா, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக அமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News September 16, 2024

பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கு மேல் திருட்டு

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மண்டபசாலையில் கமுதியை சேர்ந்த சர்க்கரை என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரிடம் பங்க் கடை ஊழியரான பிரவின்ராஜ் பல நாட்களாக கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், இதுவரை ரூ.2,14,500 ரொக்கப்பணத்தை திருடியது அம்பலமானது. இதையடுத்து நேற்று(செப்.15) எம்.ரெட்டியாபட்டி போலீசார் பிரவீன்ராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!