India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ராதிகா சரத்குமார் பின்னடைவில் உள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 70.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்,தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்,பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளனர்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 70.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்,தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்,பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
சிவகாசி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துப்பாண்டி (38). இவர் இன்று இரவு சிவகாசி அண்ணா காலனி பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு கொலை செய்த மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும் நேற்று மாலை முதல் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால்,பக்தர்கள் சதுரகிரி வருவதை தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,அனுமதிக்கப்பட்ட நாட்களில் தினசரி மழைப்பொழிவு மற்றும் ஆறுகளில் நீர்வரத்தை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர்,திருப்பரங்குன்றம்,திருமங்கலம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் ஓட்டு என்னும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் 252 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அதிகபட்சமாக 23 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.
திருச்சுழி அருகே மேல கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் (45). முத்தன் தனது உறவினர் காதணி விழாவிற்காக தனது மனைவி & 10 வயது மகனுடன் பைக்கில் பனைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மைலி பஸ் ஸ்டாப் அருகே எதிரே வந்த பைக் மோதி முத்தன் அவரது மனைவி மற்றும் மகன் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
விருதுநகர் மக்களவை தொகுதியில் வெற்றியை பெறுவதில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு இடையே போட்டிகள் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விருதுநகரில் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார் என ஒரு ஜோதிடர் கணித்துள்ளதாக இன்று நடிகர் எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி பாலாஜி நகரில் கடந்த 23ம் தேதி ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. முதல் கட்டமாக 6 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் 35 பேரிடம் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்களில் சிலர் ஒரு சில நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.26 லட்சம் மாணவ மாணவியருக்கு வழங்குவதற்காக இலவச பாடநூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மற்றும் சிவகாசி என இரு கல்வி மாவட்டங்களில் 1613 பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் 1613 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி அன்று அனைத்து பாடநூல்களும் வழங்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.