India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே மீனம்பட்டியில் பட்டாசு தொழில் முடங்கி வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் கடன்காரர்கள் மற்றும் குழுதாரர்கள் யாரும் வரும் ஜூலை 5ம் தேதி வரை கடன் வசூலிக்க வேண்டாம் என ஊர் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே கிராமத்தில் 2 நாட்களுக்கு முன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் இவ்வாறு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் அருகில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு கருப்பசாமியை தலை, கைகளில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் பெய்த மிதமான மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகாசி பகுதியில் உள்ள பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் அச்சகங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. சிவகாசி அணில் குமார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாளர் பட்டாசு உற்பத்தி தொழில் கடந்த சில நாட்களாக கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதிகாரிகளின் தொடர் ஆய்வுகளில் விதிமீறிய ஆலைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவது, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி சரிபாதியாக குறைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் வரும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 15,764 ஓட்டு வித்தியாசத்தில் தேமுதிகவை வென்றார். இதேபோல் 2019 ஆம் ஆண்டு 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரை வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை வென்றார். இதன் மூலம் 2009,2019,2024 என மூன்று முறை காங்கிரஸிடம் தேமுதிக தோற்றுள்ளது.
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் கோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 3500 க்கும் அதிகமான பணியிடங்கள் ஒழிக்கப்படும், சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 16 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.மேலும் இந்த கூட்டத்தில் காவல் உயர் அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.