India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை (செப்.19) முதல் அக்.7 வரை (செப். 25, அக். 2 தவிர) செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் கள்ளிக்குடி, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல் வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணையில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கூறிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் செயல்பட வேண்டும் என சென்னையை சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை சாய்பாபா கோவில் அருகே இன்று டூ வீலர் விபத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்ததில் உயிரிழந்த இளைஞர் அன்பு நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா இல்லை பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி இறந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ள இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கிற ஆய்வுப்பணி நாளை காலை 9 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி காளையார்குறிச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் காளையார்குறிச்சி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர். இதில் கட்லா, கெண்டை, கெளுத்தி, விரால் உள்பட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் பிடிப்பட்டது. தலைவர் கருப்பசாமி கூறுகையில், கடந்த 10ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எங்கள் ஊர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது என்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,100 பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட ஆலைகளில் விதிமீறல்கள் உள்ளதாக உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தீபாவளி நேரத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நேரத்தில் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலையிழந்து தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே மங்கலத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் இன்று காலை தனது பைக்கில் எரிச்சநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னாலிருந்து வந்த சொகுசு கார் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமமூர்த்தி சிகிச்சை பெரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராம்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு இன்று மாலை குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். இதில் சாத்தூர், இருக்கன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த மாரீஸ்வரன் அவரது நண்பர் சிவபிரசாத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த கிருஷ்ணா உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் மாரீஸ்வரனிடம் தகராறில் ஈடுப்பட்டு கம்பு, கற்களால் தாக்கினர். இதையடுத்து இருதரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து இரு தரப்பிலும் 14 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு திட்டத்தின் படி 6 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.