Virudunagar

News June 10, 2024

விருதுநகர் போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள் இன்று திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் புதிய பேருந்து அட்டை வழங்கும் வரை அவர்கள் கடந்த ஆண்டு பயன்படுத்திய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என விருதுநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News June 9, 2024

முன் விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்

image

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (50). இவருக்கும் இவரது உறவினர் சீனிவாசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வெங்கடேஷ் ஆணுறுப்பை சீனிவாசன் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீனிவாசனை தாலுகா போலீசார் கைது செய்தனர். 

News June 9, 2024

விருதுநகர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மதுரை தங்கம் நகரை சேர்ந்தவர் பிரசன்னா(42). நகை கடையில் வேலை செய்து வரும் பிரசன்னா தனது மனைவியுடன் காரில் பெருநாழி சென்று விட்டு மீண்டும் இன்று ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி அருகே குல்லம்பட்டி பகுதியில் கார்  திடீரென  நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற பிரசன்னா சம்பவ இடத்திலேயே பலியானார். ம.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். 

News June 9, 2024

விருதுநகர் அருகே நடந்தேறிய விபரீதம்

image

திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அழகன் (50). கூலி வேலை செய்து வந்த அழகன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகன் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். ம.ரெட்டியபட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News June 8, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 8, 2024

விருதுநகர்: இருசக்கர வாகனம் திருட்டு

image

விருதுநகர் வேலுச்சாமி நகர் கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் அங்குசாமி(38). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News June 8, 2024

மாவட்ட வளநபர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்க பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட வள நபர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 20 ஆம் தேதிக்குள் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 8, 2024

குரூப்-4 தேர்வுக்கு 291 மையங்கள் தயார்

image

விருதுநகர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 71,384 பேர் எழுத 291 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 291 முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 53 நடமாடும் குழுக்கள், துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படைகள், 291 தேர்வு மையங்களுக்கு வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News June 8, 2024

விருதுநகர் கூட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்

image

விருதுநகர் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகின்ற 21ம் தேதி மாலை 3 மணி அளவில் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகின்ற 15-ம் தேதி ஆகும். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா இன்று தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

கந்துவட்டி வழக்கில் முக்கிய பிரமுகர் கைது

image

சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்த தீபலட்சுமி, லட்சுமி உள்ளிட்ட 3 பெண் பட்டாசு தொழிலாளிகள் அதே பகுதியில் வசிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஈஸ்வர பாண்டியிடம் வட்டி கடன் பெற்றனர். பணம் செலுத்த தாமதமானதால் அவர்களது வீட்டிற்கு சென்ற ஈஸ்வர பாண்டியன் கடன் பெற்ற பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரில் கந்துவட்டி கொடுமை செய்ததாக நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!