India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவி.,அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்ரீவி.,புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் வைத்து மக்காச்சோளம் பயிருக்கு தெளிக்கும் கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு ஸ்ரீவி.,அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நகர் போலீசார் விசாரணை.
விருதுநகரில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலர், அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணன்கோவில் பகுதியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில் படித்து வரும் ஆந்திராவை சேர்ந்த ராஜவிக்ரம் ஆதித்யாரெட்டி, ரோகித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
2021 இல் ஏழாயிரம்பண்ணை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.20 லட்சம் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் மனுதாரர் தேசிய பசுமை தீர்பாயத்தை அணுகி நிவாரணம் பெற மதுரை ஐகோர்ட் உதரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத, அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் ரூ.10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது.
விருதுநகர் மாவட்டம், குகன்பாறையில் இன்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் குருமூர்த்திக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏழாயிரம்பண்ணை அருகே குகன்பாறையில் லட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ஒருவர் படுகாயமடைந்தார்.
விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் பாலமுருகன் மற்றும் போர் மேன் கபில் ராஜ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்த போலீசார் ஆலையின் போர்மேன் கபில் ராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கோவிலாங்குளம் விலக்கு பகுதியில் நேற்று செப்.18 இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து இறந்தது யார்? & விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
2021 இல் ஏழாயிரம்பண்ணை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.20 லட்சம் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் மனுதாரர் தேசிய பசுமை தீர்பாயத்தை அணுகி நிவாரணம் பெற மதுரை ஐகோர்ட் உதரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத, அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் ரூ.10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 38 மாவட்ட அரசு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். அதனைத் தொடர்ந்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
விருதுநகர் ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு வினோத்குமார், நித்தியா, திவ்யா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே இன்று கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த கலையரசி தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது 4 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.