Virudunagar

News June 12, 2024

கலக்கத்தில் காவல்துறையினர்!

image

விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல்துறையில் 1999 ஆண்டு இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஜூன் 1 முதல் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி இதுவரை பதவி உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்துவதாக போலீசார் புலம்புகின்றனர்.

News June 12, 2024

விருதுநகரில் 31 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமனம்

image

விருதுநகரில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 87 உதவி மருத்துவர்கள் இருக்க வேண்டும்.ஆனால் 55 உதவி மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.இதனால் மீதமுள்ள 32 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில் கால்நடை உதவி மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் 31 பேர் மாவட்டத்தின் மருந்தகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கான தேவையான மருத்துவம் தடையின்றி கிடைக்கும்.

News June 12, 2024

விருதுநகர்: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

image

ஜூன் 12ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று விருதுநகர் இரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் காலை 11.50க்கு ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள் செல்வி தலைமையிலும் இரயில்வே நிலைய மேலாளர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

News June 12, 2024

விருதுநகர்:வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

image

விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒண்டிபுலிநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஒப்பந்ததாரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு அறிவுறுத்தலை வழங்கினார்.

News June 11, 2024

விருதுநகர்: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை 

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெயபாக்கியம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.‌

News June 11, 2024

விருதுநகர் அருகே பைக்குகள் மோதி விபத்து

image

வத்திரப் அருகே எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் ஜெகதீஸ் என்பவர் அத்திகோயில் பகுதியில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து பார்த்து வருகிறார். கான்சாபுரம் -அத்திகோயில் சாலையில் பைக்கில் ஜெகதீஸ் சென்றபோது எதிரே வந்த வனராஜ் என்பவர் மோதியதில் பலத்த காயமடைந்து இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூமாபட்டி
போலீசார் நேற்று இரவு வனராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

News June 11, 2024

விருதுநகரில் சர்வதேச யோகா தினம்

image

விருதுநகரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் உலக அமைதிக்காக கூட்டுத் தியானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் என அனைத்து தாலுகாக்களில் இருந்தும் கலந்து கொள்கின்றனர் என பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சிஸ்டர் செல்வி தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

விருதுநகர் மாணவர்களுடன் உணவு அருந்திய ஆட்சியர்

image

விருதுநகர், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

News June 11, 2024

பட்டாசு ஆலை பணிகள் மீண்டும் துவக்கம்

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரங்களில் உள்ள சிறிய ரக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், தொழிலாளர் நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி நலன்களை கருத்தில் கொண்டு இன்று முதல் (11.06.24) அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பணியினை துவக்க டாப்மா சங்க உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

News June 11, 2024

விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் 18ம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பயன்பட வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!