Virudunagar

News June 13, 2024

விருதுநகர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட பிற போதைப் பொருட்களை கடத்துபவர்கள், பதுக்குபவர்கள் , விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பல்வேறு குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

News June 13, 2024

விருதுநகர் ஆட்சியரை சந்தித்த மாணவர்கள்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த சஞ்சய்ராஜ் மற்றும் சிவ பிரியேசன் ஆகிய மாணவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

News June 13, 2024

விருதுநகரில் மாணவர்கள் தேர்வு

image

விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வு போட்டிகள் நடைபெற்றது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு படிப்புக்கு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 9 வகுப்பு முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

News June 13, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் நேற்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு மனித சங்கிலியினை , மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

News June 12, 2024

மாணவ மாணவிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும்/ இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. எனவே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும், காவலர்களிடமிருந்து 74 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

News June 12, 2024

விருதுநகரில் 21 குழந்தை திருமணங்கள்

image

விருதுநகரில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 1 முதல் 31 வரை 21 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது வழக்குகள் பதிவு செய்தனர்.18 வயது பூர்த்தி அடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

News June 12, 2024

விருதுநகர் மக்களின் கனிவான கவனத்திற்கு!

image

விருதுநகர் பகுதியில் நாளை உயர் அழுத்த மின் பாதையில் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தெப்பம்,பஜார் வாடி, என் தெரு, கசாப்புக்காரர் தெரு, உள் தெரு,ஐசிஐ காலனி ராமமூர்த்தி ரோடு, கம்மாபட்டி காலேஜ் ரோடு ,பட்டேல் ரோடு, குட்செட் ரோடு எம்எஸ்பி நகர் ஆகிய பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!