India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024 மாவட்ட அளவில் கிரிக்கெட்போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தனர். விருதுநகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முக்கியமான அணிகள் போட்டியிட்டன.இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக கிரிக்கெட் ஆண்கள் அணி வீரர்கள் கலந்து கொண்டு முதலிடம் பெற்று, 45,000 ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்று சாதனை புரிந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் பதிவு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் செப்.20 முதல் அக்.28ஆம் தேதி வரை காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
சிவகாசி,விஸ்வநத்தத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபாலுக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் என்பவருடன் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர் ஹரிஹரனுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கோபாலை ஆட்டோவில் கடத்தி சென்று வாளால் வெட்டியுள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்து குதித்த கோபாலை அந்த வழியாக பைக்கில் சென்ற எஸ்ஐ செல்வி மீட்டு கொலை செய்ய முயன்ற இருவரையும் அதிரடியாக கைது செய்தார். SHARE IT
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாதத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 24 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் மூலப்பொருள்களான சல்பர் பொட்டாசியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் பெர் குளோரைட் ஆகிய ரசாயன பொருட்களை விற்பனை செய்ய படைக்கலன் உரிமம் பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேற்படி மூலப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மறு சீரமைப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 1893லிருந்து 1901 ஆக அதிகரித்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.
பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 23 ஆம் தேதி மாவட்ட அளவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் பிரபல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் இன்று(செப்.21) பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சந்தித்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை தொடரவும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் உரிய வழிகாட்டுதலை வழங்கி, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு தொடர்புடைய அலுவலர்களை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் நிலம் தேவதானம் அம்மையப்பா கூட்டுறவு விவசாய சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. கூட்டுறவு சங்கம் முறையாக குத்தகை பணம் செலுத்தாததால் மாவட்ட வருவாய் நீதிமன்ற உத்தரவில் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் வளர்மதி தலைமையில் ரூ.3 கோடி மதிப்பிலான 103 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்டனர்.
வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்த மாட்டு வியாபாரி சோலையப்பனுக்கும் (60), தாயில்பட்டி பால்ராஜுக்கும் மாடு வாங்கி விற்பதில் முன்பகை இருந்துள்ளது. இதனால் பால்ராஜ் உள்ளிட்ட 5 பேர் சோலையப்பனை கம்பு, கற்களால் தாக்கினர். காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சோலையப்பன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி பால்ராஜ், வரதராஜ், பாலா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.