India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் வரும் மே.4ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் தேர்வை 6 மையங்களில் 3012 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 812 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 629 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்(1), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(1), சோசியல் ஒர்க்கர்(1) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே.9 க்குள் நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்(1), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(1), சோசியல் ஒர்க்கர்(1) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே.9 க்குள் நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தொழிலாளர் தினமான நாளை மே.1ஆம் தேதியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் சமீப நாட்களாக இடி மின்னல் தாக்கி விபத்து ஏற்படுவது தொடர்கிறது. இதை தடுக்க பட்டாசு ஆலைகளில் பட்டாசு தேக்கி வைக்கும் அறைகள் மட்டுமல்லாமல் அனைத்து பட்டாசு தயாரிப்பு அறையிலும் இடிதாக்கி அமைத்திருந்தால் மட்டுமே பட்டாசு ஆலைகள் மீது இடி மின்னல் தாக்கும் போது விபத்து ஏற்படுவது குறையும் என வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், மல்லி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி டவுன் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகராஜ், மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், மாரனேரி காவல் நிலைய தலைமை காவலர் கார்த்தி, சிவகாசி டவுன் காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கல்லுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
விருதுநகரில் தமிழ் வார விழாவை முன்னிட்டு மே.4 அன்று பொதுமக்களுக்கான 100 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை தவிர) ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஆர்.எஸ்.ஆர். மெட்ரிக் பள்ளி, விருதுநகர் ஹாஜிபி பள்ளி, அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல்நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 96988-10699 இல் அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா இனங்களை இணைய வழி செலுத்த உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள கலெக்டர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
▶️இராஜபாளையம் -7402608277
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 7402608281
▶️வத்திராயிருப்பு – 7402608285
▶️சிவகாசி – 7402608289
▶️வெம்பக்கோட்டை – 7402608294
▶️சாத்தூர் – 7402608298
▶️விருதுநகர் – 7402608303
▶️அருப்புக்கோட்டை – 7402608309
▶️காரியாபட்டி – 7402608313
▶️திருச்சுழி – 7402608317
▶️நரிக்குடி – 7402608321
இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி ஸ்டான்டர்டு பட்டாசு ஆலையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் 100% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி 58, என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.