Virudunagar

News April 3, 2025

கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

image

உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இராஜபாளையம் 97863-36396, 76959-53836 சிவகாசி 90425-19911 ,94420-58126 விருதுநகர் 98434-81831 ,97151-09134 என்ற உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதன்மை நிர்வாக அலுவலர், செயலாட்சியர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 2, 2025

வெம்பக்கோட்டை அகழாய்வில் அடுத்த அதிஷயம்

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் “தங்கத்தால் செய்யப்பட்ட மணி” ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2025

விருதுநகரில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 2, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் 100 காலிப்பணியிடங்கள்

image

விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 100 பேர் நிரப்பப்பட உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஏப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 2, 2025

சாத்தூரில் தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

image

சாத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சர்க்கரைதாஸ்(48) என்பவர் 7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு மாணவியின் தாயார் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரனை நடத்தி சர்க்கரைதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 2, 2025

சதுரகிரி அனுமதி குறித்து ஆலோசிக்க வனத்துறைத் திட்டம்

image

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரிக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை யோசித்து வருகிறது. 

News April 1, 2025

விருதுநகரில் வேலைவாய்ப்பு  முகாம்

image

விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாம் 09.04.2025 அன்று காலை 8.30 மணி முதல் விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிராமத்தில் உள்ள அல் அமீன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வேலைத்தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் 

News April 1, 2025

விருதுநகர்: நிலப்பிரச்சனைகளை தீர்க்கும் கோவில்

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் திருமேனிநாதர் கோவில் உள்ளது. இங்கு திருமேனிநாதர், பூமிநாதர் இறைவனாகவும், துணைமலைநாயகி இறைவியாகவும் உள்ளனர். இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது நம்பிக்கை. அதேபோல இங்கு வழிபட்டால் முன்னோர்களின் சாபம், நிலப் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

News April 1, 2025

விருதுநகரில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப். 4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

விருதுநகரில் அக்னி சட்டி தயாரிக்கும் பணிகள் தீவிரம்

image

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று முன் தினம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. வருடந்தோறும் பங்குனி பொங்கலை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தற்பொழுது அக்னி சட்டி தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.

error: Content is protected !!