Virudunagar

News September 26, 2024

விருதுநகரில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப்.26) முதல் அக்.1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள்(செப்.28) அன்று விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்கள், செப்.29 அன்று விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 26, 2024

சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடும் எதிர்ப்பு

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அகத்தாகுளம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்காக சுமார் 900 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிற்கு நிலம் எடுக்கும் பணிக்காக அலுவலர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சிப்காட் தொழில் பூங்காவிற்கு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 26, 2024

விருதுநகர் அருகே பாலித்தீன் பை நிறுவனத்தில் தீ விபத்து

image

விருதுநகர் அருகே கருப்பம்பட்டியில் உள்ள சிட்கோ தொழில்பேட்டையில் சிவகாசியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று (செப்.25) திடீரென எந்திரங்கள் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். தீ விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 25, 2024

சிவகாசியில் லாரி புக்கிங் அலுவலகத்தில் பட்டாசு விபத்து

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் கிழக்கு காவல் நிலையத்துக்கு அருகில் தற்காலிக செட்டில் செயல்பட்டு வந்த மேட்டூர் ஸ்பீடு பார்சல் அலுவலகத்தில் பட்டாசு பண்டல்கள் இறக்கும் போது எதிர்பாராத போது பண்டல்கள் ஒன்றுடன் ஒன்றாக உரசியதால் திடீரென பட்டாசுகள் வெடிக்க தொடங்கின.பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News September 25, 2024

இந்திய ரயில்வே தேர்வு பயிற்சி வகுப்பு – ஆட்சியர் தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (செப்.25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 27ஆம் தேதி விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராக உள்ள ஆர்வலர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பட வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

மானாமதுரை – தென்காசி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

image

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை, நரிக்குடி ,திருச்சுழி வழியாக தென்காசி வரை இன்று அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது சுமார் 121 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் இன்று காலை நரிக்குடி ரயில்வே நிலையத்தை கடந்து சென்றது.மேலும் இந்த வழித்தடம் 110 கி.மீ வேகத்தில் இயக்க தயார் நிலையில் இருக்கிறதா என சோதிப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் ரயில் பயணங்களில் நேரத்தை குறைக்கும் என கூறினர்.

News September 25, 2024

உருக்கமான கடிதம் எழுதி வைத்து குடும்பத்துடன் தற்கொலை

image

ஸ்ரீவி அருகே கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்த நாகசுரேஷ், மணைவி விஜயலட்சுமி, மகள் முத்தீஸ்வரி(6) ஆகியோர் திருப்பூர் ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 3 பேரும் 3 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 25, 2024

விருதுநகரில் அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை

image

விருதுநகர் திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விருதுநகர் எஸ்.எஸ்.கே கிராண்ட் கந்தசாமி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் தங்கராஜ், செல்வமணி தலைமையில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று (செப்.24) கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

News September 25, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (செப்.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் டி என் ரைட்ஸ் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

News September 24, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

image

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் கடந்த 19ம் தேதி லட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 90 சதவீத தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருமூர்த்தி (19) என்ற தொழிலாளி இன்று (செப்.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

error: Content is protected !!